Skip to main content

ஆரியுடன் பிக்பாஸ் ஐஸ்வர்யா ‘டிக் டாக்’ தளத்தில் வெளியிட்ட ப்ரோமோஷனல் வீடியோ 

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
aari

 

கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன்  பி.தர்மராஜ் இணைந்து தயாரித்து, ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் படத்தின் தலைப்பும் 'டிக் டாக்' தளத்தில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'அய்யனார்' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கும் இப்படத்தின் இந்த ப்ரொமோஷன் வீடியோ குறித்து நாயகன் ஆரி பேசியபோது...

 

 

இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வீடியோ டிக் டாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் தங்களோட வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை கடந்தே வந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய காதலை முதலில் கடக்கும் பருவம் இளமைப் பருவம் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக உணர்வார்கள். அப்படிப்பட்ட காதலை மையமாக வைத்து சுழலும் படம்தான் இது. ஆகவே, இப்படத்தினை எங்கள் காதல் கதை என்று சொல்லாமல் உங்கள் காதல் கதை என்று சொல்வதிலேயே படக்குழுவினராக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  

 

 

காதலிக்கும் நாம் கால ஓட்டத்தால் மாறுவோம். ஆனால் காதல் எப்போதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவருக்குக்குள்ளும் உலாவும் காதலை பெரிய அளவில் கொண்டாடுகிற இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சமூக வலைதளமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள்  தங்களது காதல் விஷயத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ தளத்திலேயே படத்தின் ப்ரொமோஷன் வீடியோவை வெளியிட்டோம். அடுத்து  விரைவில் படத்தின் தலைப்பும் அறிவிக்க உள்ளோம். அதையும் இதே போல 'டிக் டாக்' தளத்திலேயே வெளியிட உள்ளோம். இனிமேல் இந்தமாதிரி படத்தின் பர்ஸ்ட் லுக், இசை, பாடல்கள் எல்லாம் இந்த தளத்தில் வெளியாவது அதிகரிக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிக்க சொன்னால் இயக்குனருடன் சண்டை போடும், பிக்பாஸ் ஐஸ்வர்யா...

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

நடிகர் ஆரி, நடிகை ஐஸ்வர்யா நடிப்பில், அய்யனார் திரைப்பட இயக்குனர், ராஜமித்ரன் "அலேகா" என பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
 

big boss aiswarya



90 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா படப்பிடிப்புக்கு சரிவர வருவதில்லை, மேலும் இயக்குனர் கூறுவதுபோல் நடிக்காமலும் இருந்திருக்கிறார்.

இந்தநிலையில் இன்று மேடவாக்கத்தில் நடைபெற்ற படபிடிப்பில், ஐஸ்வர்யா வழக்கம் போல் செய்து வந்துள்ளார். 

படத்தின் முக்கிய காட்சியின்போது நடிகைக்கும், இயக்குனருக்கும்,  சண்டை வந்துள்ளது.. தயாரிப்பாளரும் புதியவர் என்பதால் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளாராம். மேலும் படகுழுவினர், ஒரு படம் கூட ஒழுங்காக வெளிவராத நிலையில் இப்படி செய்கிறாரே என, ஐஸ்வர்யாவை பற்றி புலம்புகின்றனர்...

 

 

Next Story

'மதத் தீவிரவாதத்தை அழிப்போம்' - ஆரி முழக்கம் !

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
aari

 

சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனது பங்களிப்பை அளித்து வரும் ஆரி, 'அலேகா' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த ஆரி, புல்வாமா பகுதியில் மத்திய சேமக் காவல் படை வீரர்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வீரர்கள் மீது பாகிஸ்தானின் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 46 வீரர்கள் பலியானதையறிந்து பாகிஸ்தானின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி மற்றும் அலேகா படக்குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

மேலும், மதத் தீவிரவாதத்தை அழிப்போம், இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை இந்தியர்களாகிய நாம் ஒன்றிணைந்து ஒழிப்போம். உடலை மண்ணுக்கும், உயிரை இந்திய மக்களுக்கும் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு எங்களின் வீரவணக்கம் என்று முழக்கம் எழுப்பினர். மேலும், காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் ஆரி. க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார்.