Skip to main content

ஓவியாவுடன் காதல் ! விளக்கமளித்த ஆரவ் 

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
oviya

 

 

 

பிக்பாஸிற்கு பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்து வரும் நடிகர் ஆரவ் ஓவியாவுடனான தன் உறவை குறித்து விளக்கமளித்து பேசியபோது... "ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்! பொண்ணு ஓவியா இல்லையாம்!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
shs

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

"இருட்டு அறையில் முரட்டு குத்த ஓட வைக்கலன்னா 90 ml வந்துருக்குமா?'’ (வீடியோ)

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

சேரனின் இயக்கத்தில் திருமணம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் மற்றும் உறவுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து , 90ml போன்ற திரைப்படங்களின் மேல் இருக்கும் கோபத்தையும் இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.