Published on 28/01/2021 | Edited on 28/01/2021

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தச் சேனலில் மைதானத்தில் நடக்கும் சுவராசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது, அவரும் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரும் போட்டி குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும், அவர்கள் பயன்படுத்திய வார்த்தை, குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் இருவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.