Skip to main content

99 வயதான ஒருவரால் இப்படியொரு சாதனை...

Published on 03/03/2018 | Edited on 03/03/2018

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 99 வயது நீச்சல்வீரர் ஜார்ஜ் கொரோனஸ் காமன்வெல்த் பயிற்சிபோட்டியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 56.12நொடிகளிலில் கடந்து தங்கம் வென்று உலகசாதனை படைத்துள்ளார்.

grorge

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் காமன்வெல்த் பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. இதில் நீச்சல் போட்டியில் 100முதல்104 வயதுடையவர்களின் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீரர் ஜார்ஜ் கொரோனஸ் 50 மீட்டர் இலக்கை 56.12 நொடிகளில் கடந்து 

தங்கப்பதக்கம் வென்று முந்தைய சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரிட்டனை சேர்ந்த ஜான் ஹாரிசன் 1.31 நொடிகளில் நீந்தியது தான்  முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அதனை ஜார்ஜ் முறியடித்துள்ளார்.

george

இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், "நான் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திலே நான் நீச்சல் அடிப்பதை விட்டுவிட்டேன். அதன் பின்னர் அதைப் பற்றி  நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உடற்பயிற்சிக்காகதான் என் ஓய்வுக்காலத்தில் மீண்டும் நீச்சல் அடிக்கத்தொடங்கினேன். என்னுடைய இலக்காக இருந்தது 58 நொடிகள்தான். ஆனால் அதை விட இரண்டு நொடிகள் முன்னே வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்று ஜார்ஜ் கூறினார். வரும் ஏப்ரல் மாதம் ஜார்ஜ் செஞ்சுரி அடிக்கப்போகிறார். அதாவது தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடப்போகிறார். அதுமட்டுமல்லாமல் தனது நீச்சல் பயிற்சியை அதிதீவிரமாக இவர் மேற்கொண்டது இவரது  80வது வயதின்  தொடக்கத்தில்தான்.

Next Story

சுட்டெரிக்கும் வெயில்; சுகம் தரும் நீச்சல் குளம்! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த நீச்சல் குளங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சுகமாக தண்ணீரில் குழந்தைகளும், பெரியவர்களும் நீச்சல் அடித்தும் குளித்தும் மகிழ்ந்தனர். அதேபோல், கோடைகால விடுமுறையை கருத்தில் கொண்டு நீச்சல் பயிற்சி முகாம்களும் துவங்கியுள்ளன. சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்கின்றனர்.  

 

 

Next Story

நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்ற தாத்தா... பேத்தி, தாத்தா சடலமாக மீட்பு!

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

Tragic incident while teaching granddaughter to swim!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் உள்ள அயனாவரம் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருடைய மகன் கிருஷ்ணன். கிருஷ்ணனின் மகள் இனியா (வயது 9). இவர் நொளம்பூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.  

 

நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இனியா ஆர்வமாக இருந்தார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில், செல்வராஜ் தனது பேத்திக்கு நீச்சல் கற்று கொடுப்பதற்கு முன்வந்தார். அதன்படி, நொளம்பூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் நிறைந்த ஏரியில் தனது பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் செல்வராஜ். 

Tragic incident while teaching granddaughter to swim!

அதைத் தொடர்ந்து, தனது பேத்திக்கு செல்வராஜ் தண்ணீரில் இறங்கி நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேத்தி இனியா தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன சிறுமியின் தாத்தா செல்வராஜ், தண்ணீரில் தத்தளிக்கும் பேத்தியை மீட்கும் முயற்சியில் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, செல்வராஜூம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தாத்தா, பேத்தி ஆகிய இருவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூர் காவல் நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.