Skip to main content

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பும்ரா, வருண் சக்கரவர்த்தி சந்தேகம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

bumrah

 

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் நான்காம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 இருபது ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்திய இருபது ஓவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்திக்கு, யோ-யோ டெஸ்ட் எனப்படும் உடல் தகுதி தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அவர் தேர்ச்சியடையவில்லை. ஏற்கனவே இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில், வருண் சக்கரவர்த்தி யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தற்போது உறுதி செய்துள்ளார். யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய பும்ரா, இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகிவுள்ளது. பும்ராவிற்கு ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ரஜினியை சந்தித்த கொல்கத்தா அணி வீரர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

.

cricketers venkatesh and varun meets rajinikanth

 

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வழக்கம் போல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்போது வரை புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்து குஜராத் அணி முதல் இடத்திலும் 15 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை அணியும் நான்காவது இடத்தில் 13 புள்ளிகளுடன் லக்னோ அணியும் உள்ளது.  

 

இந்த நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளனர். இருவரும் ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் தங்களது சமூக வலைத்தளத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரஜினி பற்றி கூறியுள்ளனர்.

 

வெங்கடேஷ் ஐயர் பதிவிட்டிருப்பதாவது, "தலைவர் தரிசனம். இன்றைய நாள் என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது. சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்த்தை ஒருவழியாகச் சந்தித்தேன். என்ன ஒரு அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்" என பதிவிட்டுள்ளார். 

 

வருண் சக்கரவர்த்தி பதிவிட்டதாவது, "இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது தான் நடக்கும். அது நடந்தது.அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன். லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் (LIVING WITH HIMALAYAN MASTERS) என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

பும்ரா மீது அதிருப்தி; ஹர்திக் பாண்டியா குறித்து விளக்கம் கேட்கத் தயாராகும் பிசிசிஐ!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

hardhik pandya and jasprit bumrah

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை போட்டியில், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி,ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

 

இந்தநிலையில் இந்த தோல்வியால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முழு உடல் தகுதி இல்லாததால் ஐபிஎல்-லில் பந்து வீசாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படாமல் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றது குறித்தும் தேர்வு குழுவிடமும், அணி நிர்வாகத்திடமும் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு அணி வீரர்களுக்கு ஓய்வு தேவை என பும்ரா கூறியது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "பயோ-பபிள் சோர்வைப் பொறுத்தவரை, ஐபிஎல்லில் விளையாடுமாறு வீரர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. விராட் அல்லது ஜஸ்பிரிட் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானது என்று நினைத்திருந்தால், அவர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கலாம். பிசிசிஐ அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கவும் அனுமதித்துள்ளது" என கூறியுள்ளார்.