Skip to main content

குறைத்து மதிப்பிடப்படுகிறாரா அம்பதி ராயுடு...?

Published on 07/11/2018 | Edited on 07/11/2018

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிகளுக்கு வேகபந்து வீச்சில் புவனேஷ், பும்ராஹ் இணை தயாராக உள்ளது. உலகின் சிறந்த வேகபந்து வீச்சாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சு இணையான குல்தீப் யாதவ், சஹாலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டாப் ஆர்டர் பேட்டிங்கை பொறுத்தவரை ஷர்மா, தவான், கோலி ஆகியார் சாதனை மேல் சாதனை படைத்து உலகின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இந்த மிடில் ஆர்டர் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.

 

aa

 

 

தற்போது விளையாடிவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் தோனி மட்டுமே தனது உலக கோப்பை இடத்தை உறுதி செய்துள்ளார். அவர் 5-ஆம் இடத்தில் களமிறங்க வாய்ப்புகள் அதிகம். 4 மற்றும் 6-ஆம் இடத்தில் களமிறங்க போகும் வீரர்கள் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த சில தொடரில் ராயுடு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ரோஹித் மற்றும் கோலி இருவரும் உலக கோப்பையில் 4-வது இடத்தில் ராயுடு விளையாடுவார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

 

ராயுடுவின் தகுதியையும், அனுபவத்தையும், புள்ளி விவரங்களையும் சற்று ஆராய்ந்து பார்த்தால் இது அவருக்கு மிகவும் தாமதமாக கிடைத்த வாய்ப்பாகவே கருதப்படுகிறது. 33 வயதான ராயுடு ஆந்திராவை சேர்ந்தவர். அண்டர் 15, 16, 17, 19 ஆகிய லெவல்களில் இந்திய அணிக்கு ஆடியுள்ளார். 2004-ல் பங்களாதேஷில் நடைபெற்ற அண்டர்  19 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். 2007-ல் தொடங்கப்பட்ட ஐ.சி.ல். போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இதன் மூலம் ஐ.பி.ல். 2010-ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். 

 

2010 முதல் ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். துவக்க ஆட்டக்காரர் முதல் 7-வது நிலை வீரர் என அனைத்து இடங்களிலும் அணியின் தேவைக்கு ஏற்ப களமிறங்கினார். அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோது அணியை மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இதனால் அவருக்கு தேசிய அணியில் 2013-ல் இடம் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அசத்தினார். 2014-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 118 பந்துகளில் 121* ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் 2015 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் ராயுடு. ஆனால் 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு கிட்டவில்லை.

 

aa

 

 

2016-ல் மூன்று போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் எடுத்திருந்தார். 2017-ல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐ.பி.ல்.க்கு திரும்பிய போது அந்த அணியால் ஏலத்தில் எடுக்கபட்டார். ஐ.பி.ல். 2018-ல் 16 போட்டிகளில் விளையாடிய அவர் 602 ரன்கள், 43 சராசரி, 1 சதம்,  150 ஸ்ட்ரைக் ரேட் என அசத்தினார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை பெற முக்கிய பங்காற்றினார். 

 

2018-ல் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு இது வரை 10 இன்னிங்ஸ்களில் 392 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 56, ஸ்ட்ரைக் ரேட் 91 என இந்த வருடம் மிக சிறப்பாக ஆடினார். ஒரு நாள் போட்டிகளில் ராயுடுவின் சராசரி 52 ஆக உள்ளது. விராத் கோலிக்கு பிறகு இந்திய அணியில் அதிக சராசரி கொண்ட வீரர் ராயுடு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகவும் குறைத்து மதிப்பிட பட்டுருக்கிறார் என்பதே உண்மை. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நன்றாக விளையாடி வரும் ராயுடு அதிக அனுபவமும், சிறப்பான பீல்டிங் திறமையையும் கொண்டவர். அவர் அடுத்த வருடம் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. 
 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.