Skip to main content

ஓய்வில் 360 டிகிரி...

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விளையாட்டு வீரரின் வீடியோ வெளியானது. அந்த வீடியோ வெளியான பின் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. வீடியோவில் பேசியது என்னவென்றால், “நான் உடனடியாக அனைத்து தரப்பு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளப்போவதாக முடிவு செய்துள்ளேன். இது மற்றவர்களுக்கான நேரம். எனக்கு ஒரு மாற்றம் தேவை, உண்மையிலேயே நான் டையர்ட் ஆகிவிட்டேன். எனக்கு எல்லாமே அந்த பச்சை மற்றும் கோல்ட் நிற உடைதான். எனக்கு உதவிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஊழியர்கள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் மேலும் வருவாய் ஈட்டுவதற்காக இதிலிருந்து செல்லவில்லை, எரிவாயு தீர்ந்தும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இது நான் வெளியேற வேண்டிய காலம். உங்களுடைய இறக்கத்திற்கும், பெருந்தன்மைக்கும், உங்களுடைய புரிதல்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்" என்று தன் விடைபெறும் துயரத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்துவிட்டு, ரசிகர்களையும் கலங்க செய்துவிட்டார், ஏ.பி. டிவில்லியர்ஸ்.
 

abd

 

 

 

ஏபி டிவில்லியர்ஸ் என்ற மனிதர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்தான். ஆனால் அவர் இந்தியாவில் விளையாடினாலும், உலகில் வேறெந்த மைதானத்தில் விளையாடினாலும் அவரை கொண்டாட ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தோனி ஆடுவது சென்னை அணிக்காக இருந்தும் அவரை மற்ற அணி ரசிகர்களும் கொண்டாடுகின்றனரே அது போலத்தான் ஏபிடியையும் அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் அவரை எதிரணி ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதுபோன்ற ரசிகர்களை சம்பாரிப்பது ஒன்றும் எளிதல்ல. விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் அமைவதெல்லாம் ஒன்று அவரது ஆட்டத்தை பொறுத்து மற்றொன்று அவரின் நடவடிக்கையை பொறுத்தது. 
 

 

abd 1

 

 

 

ஏபிடிக்கு ரசிகர் பட்டாளம் இதுபோன்று அமைந்ததற்கு காரணம் இந்த இரண்டுமே தான். அவரது ஆட்டம், பேயாட்டம். பந்து வீசுபவர் எங்கு பந்தை வீசினாலும் அதை லாபகமாக சிக்ஸ் அடிக்கும் ஒரே வீரர் இவர்தான். வேகப்பந்தை ஸ்விப் அடிப்பதும் இவர்தான். இவரின் பேட்டிங்கை ரசிப்பவர்கள் இவருக்கு 360 டிகிரி என்ற செல்லப்பெயரையும் வைத்து இருக்கின்றனர். மைதானத்தின் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும், பவுலிங்குக்கு சாதகமாக இருந்தாலும் ஏபிடியின் அதிரடி ஆட்டத்தை தடுப்பது கொஞ்சம் கடினம்தான். பேட்டிங்கை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். பீல்டிங்கிலும் இவர் ஒரு குட்டி ஜான்டி ரோட்ஸ் என்பது ஊரறிந்தது. வீக்கட் கீப்பராக நின்றபோதிலும், பீல்டராக பவுண்டரி கோட்டிலும், 30 யார்ட்க்கு உள்ளும் இவர் பிடித்த கேட்சுகள் எல்லாம் வேற லெவல். ஒரு சாதரண பீல்டராக இருந்தால் பந்தை தடுக்க மட்டுமே செய்திருப்பார், ஆனால் ஏபிடியோ அதை கேட்சாக மாற்றுவார். 
 

 

abd crying

 

 

 

ஏபிடியின் வெற்றிக்கு மூன்று விஷயங்கள்தான் காரணம் ஒன்று வெறித்தனமான பேட்டிங், இரண்டு சிறுத்தைப்போல பீல்டிங், மூன்று அன்பை கொட்டும் மனசு. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இவர் பிங்க் உடை அணிந்து ஆடிய பேட்டிங்கை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இவர் ஒரு ஏலியனாகதான் தெரிந்திருப்பார். வைடாக பந்து போட்டாலும் பந்தை நோக்கி சென்று மடக்கி பின்னே அடிக்கும் சிக்ஸுகள். டைமிங்கில் அடிக்கும் சிக்ஸுகள் என்று முப்பத்தியொரு பந்துகளில் சதத்தைக் கடந்தார். இன்றுவரை அதை யாராலும் சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்க முடியவில்லை. பீல்டிங் செய்யும் போது பாய்ந்து பிடித்த கேட்சுகளை பார்க்கும் போது சுப்பர் மேன் நிஜம்தானோ என்ற எண்ணத்தை கொண்டு வந்துவிடும். என்னதான் இத்தனையும் உழைத்து தன்னை மெருகேற்றியவருக்கு, அதிர்ஷ்டம் ஒரு போதும் கைகொடுக்கவில்லை. இந்த அதிர்ஷ்டமின்மை அவருக்கு மட்டுமில்லை, தென்னாபிரிக்கா நாட்டிற்கே உண்டானது. என்னதான் கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியை வைத்திருந்தாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர் தலைமையில் ஆடிய 2015 உலக கோப்பையிலும் இதே நிலைதான். வெளியேறியபோது மனமுடைந்து அழுதுகொண்டே சென்றார். ஏர்போர்ட்டில் ரசிகர் ஒருவர் உங்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல ஆசையாக இருக்கிறது என்று பலகையை வைத்து நிற்க அதையும் செய்தார். நீங்கள் என்னதான் உலகக்கோப்பையை ஜெயிக்கவில்லை என்றாலும் கோடானகோடி ரசிகர்களை ஜெயித்துவிட்டீர்கள் ஏபிடி. இந்திய மக்களாகிய நாங்கள் உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வோம்.   

 

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.