Skip to main content

ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து புதிய சாதனை! (வீடியோ)

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
Cric

 

 

ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளனர் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த இளம் வீரர்கள். 
 

நியூசிலாந்து நாட்டில் உள்ளூர் அணிகளை இணைத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஃபோர்டு கோப்பைக்கான இந்தத் தொடரில் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த லிஸ்ட் ஏ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜோ கார்டர் மற்றும் ப்ரெட் ஹாம்ப்டன் ஆகிய இரு வீரர்கள் முறையே ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் களமிறங்கினர். எதிரணி வீரர் வில்லெம் லூடெக் பந்துவீச இந்த இரு வீரர்களும் எதிர்கொண்டனர். அப்போது 4, 6 (நோ.பா), 6 (நோ.பா), 1, 6, 6, 6 என அடுத்தடுத்து அதிரடியாக பந்துகளை நாலாப்புறமும் பறக்கவிட்டனர். இதன்மூலம், ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்த லிஸ்ட் ஏ புதிய சாதனையை இந்த இரு வீரர்களும் படைத்துள்ளனர். 
 

அதுவரை சீராக பந்துவீசிக் கொண்டிருந்த வில்லெம் லூடெக் 10 ஓவர்களில் 85 ரன்கள் பறிகொடுத்ததற்கு, இந்த ஒரு ஓவரே காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் கார்டர் 102 ரன்களும், ஹாம்ப்டன் 95 ரன்களும் என அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 313 ரன்கள் குவித்திருந்தது. இதற்கு முன்னர் தாக்காவில் நடைபெற்ற லிஸ்ட் ஏ போட்டியில் ஜிம்பாப்வேயின் எல்டன் சிகும்புரா 39 ரன்கள் எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. 
 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.