Skip to main content

‘‘ஐயோ! ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

பொறாமைக் குணம் என்றும் உங்கள் முன்னேற்றத்தை முழுவீச்சில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்.இந்தக் குணம் இருந்தால் சதா அடுத்தவர்களைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். அவர்களின் நிலைமையைப் பார்த்து மனம் வெதும்பும். பொறாமைக் குணம் இருந்தால் ஒருபோதும் அமைதி கிடைக்காது. அடுத்தவர்களின் வளர்ச்சி கண்டும் மனம் பொறுக்காது. அதுமட்டுமில்லாமல்  அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையிலும் ஈடுபடுவார்கள்.அவர்களைப் பற்றிப் பொய்யான, தவறான தகவல் களைப் பரப்பி விடுவார்கள்.அவர்களின் உடைமைகளுக்கு முடிந்த வரையில் பாதிப்பை ஏற்படுத்தி அதில் சுகம் காண்பார்கள்.மேலும் அவர்கள் உயிருக்கே தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுவார்கள்.இந்தவகையான தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். இதன்மூலம் எதிரியை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே களங்கப்படுத்திக் கொள்வார்கள்.

jealous picture

பொதுவாக பொறாமை யார் மீது ஏற்படுகிறது? நமது அண்டை அயலார்கள் மீதே ஏற்படுகிறது.

‘முகேஷ் அம்பானி கோடி கோடியாக சம்பாதிக்கிறாரே!’ என்று தெருக்கோடியில் உள்ள டீக்கடைக்காரர் பொறாமை கொள்வது இல்லை. ஆனால் அடுத்த தெருவில் உள்ள டீக்கடைக்காரரைப் பற்றி அவர் பொறாமைப்படுவார்.பக்கத்து வீட்டுக்காரரும், எதிர் வீட்டுக்காரரும்தான் பொறாமைப் படுபவர்களாக இருக்கிறார்கள்.ஒரு லாட்டரி சீட்டு அதிபரிடம் ஒருமுறை ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. ‘‘ஐந்து கோடி ரூபாய் பரிசு அறிவிக்கிறீர்கள். பரிசு 100 என்ற எண்ணுக்கு விழுந்தால் அதற்கு முந்தைய 99 எண்ணை வைத்திருப்பவர் மற்றும் அதற்குப் பிந்தைய 101 எண் சீட்டை வைத்திருப்பவர் மனம் என்ன பாடுபடும்?’’ என்று கேட்கப்பட்டது.அதற்கு அந்த லாட்டரி சீட்டு அதிபர் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘‘ஐயோ! ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’ என்று  சலிப்படைவதோடு சரி. ஆனால் பரிசு விழுந்தவரின் பக்கத்து வீட்டுக் காரரும், எதிர் வீட்டுக்காரரும்தான் இதனைக் கண்டு பெரிதும் மன உளைச்சல் அடைகிறார்கள். ரொம்பப் பொறாமைப்படுகிறார்கள்’’ என்றார்.இது மிகவும் சிந்திக்கத் தூண்டுகிற அர்த்தம் உள்ள பதில். நம் அருகில் இருப்பவர்கள் மூலமாகவே பொறாமை நம்மைத் தாக்குகிறது.சம துறையில் உள்ளவர்கள் ஒருவரையருவர் மனமுவந்து பாராட்டுவது என்பது மிக அரிது.ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரை உண்மையாகவே பாராட்டுவது இல்லை. பொறாமைப்படுகிறார்.ஒரு மாணவன் தன் வகுப்பில் உள்ள தன் சக நண்பன் அதிக மதிப்பெண் பெற்றால் பொறாமை அடைகிறான்.ஒரு பெண் ஒரு ஆணின் பேரழகைப் பற்றிப் பொறாமைப் படுவதில்லை. ஆனால் ஒரு பெண் பேரழகாய் இருந்தால் இன்னொரு பெண் பொறாமைப்படுகிறாள்.எனவே பொறாமை என்பது பெரும்பாலும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களுக்கு இடையேதான் ஏற்படுகிறது.ஆனால் பொறாமைப்படுகிறபோது அதனால் கிடைப்பது நிச்சயம் இழப்பே. பொறாமை என்றுமே வெற்றியைத் தரவே தராது.

நாய் ஒன்றுக்கு எலும்புத் துண்டு கிடைத்தது. அதனைக் கவ்விக் கொண்டு மற்ற நாய்களால் தொந்தரவு இல்லாத இடத்தில் சென்று அதனை ஆற அமர சாப்பிட விரும்பியது.எனவே அங்கிருந்து தூரத்தில் உள்ள இடத்திற்கு அதனைக் கவ்விப் பிடித்தவாறு ஓடியது. அப்போது வழியில் ஒரு கால்வாய் குறுக்கிடவே அதனுள் இறங்கி அக்கரையை அடைய நீந்தியது.அப்போது நீரில் அதன் நிழல் தெரிந்தது. நீருக்குள் இன்னொரு நாயும் இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டது. இன்னும் உற்றுப் பார்த்தபோது தான் வாயில் வைத்திருந்த எலும்புத் துண்டை அந்த நிழலும் வைத்திருப்பதைப் பார்த்தது.‘ஆஹா! என்னைப் போலவே இந்த நாயும் எலும்புத் துண்டை வைத்துக் கொண்டு என்கூடவே வருகிறதே! இதனை அடித்துத் துரத்த வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு அதனைக் கடித்துக் குதறுவதற்காகத் தன் வாயைக் கோபமாகத் திறந்தது.அதன் வாயில் கவ்விக் கொண்டிருந்த எலும்புத் துண்டு தண்ணீருக்குள் விழுந்து ஆழத்தில் மறைந்துபோனது.பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு நஷ்டம்தான் அதன் பரிசாகக் கிடைக்கும்.அதேபோல பொறாமை அடைந்து அதனால் எதிராளிக்கு அவப்பெயரைச் செய்வதும் மிகவும் தவறான செயல் ஆகும். ஆனால் பொறாமை உணர்ச்சி கொண்டவர்கள் இதைத் தங்கள் கடமையாகவே செய்வதுதான் துயரத்தின் உச்சம்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.