Skip to main content

பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்த என்ன காரணம்... வழியெல்லாம் வாழ்வோம் #18

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
vazhiyellam vaazhvom

 

 

 

 

பெதும்பை பருவ மாற்றங்கள்:

பூப்படைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்வியலில் முக்கிய அங்கம் தான். ஆனால் சரியான காலத்தில் பூப்படைதல் நிகழ்வது முக்கியம். சிலகுழந்தைகள் 8 அல்லது 9 வயதில் பூப்படைவதும், வேறு சில குழந்தைகள் 15 வயது தாண்டியும் பூப்படையாமல் இருப்பதும் ஒருசேர காணமுடிகிறது. இவற்றுக்கான காரணங்கள் என்ன? இந்த விரைவான அல்லது தாமதமான பூப்படைதல் நிகழ்வு எங்ஙனம்  குழந்தைகளின் மனோநிலையைப் பாதிக்கின்றன. இவ்வகையான பூப்படைத்தலை தவிர்க்க குழந்தைகளுக்கு பழக்கப்படவேண்டிய உணவுமுறைகள் குறித்து பேசலாம்.

 

சிறு வயது பூப்பெய்துதலுக்கான காரணங்கள்:

I. சுற்றுச்சூழல் காரணங்கள்

II. மரபியல் காரணங்கள்

 

I. சுற்றுச்சூழல் காரணங்கள்:

சுற்றுச்சூழல் காரணிகளுள் முக்கிய இடம் பிடிப்பது அவர்களின் உணவுமுறை.


1. பால் பொருட்கள்:

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சிறுவயதில் அதிகம் பால் மட்டும் குடிக்கும் குழந்தைகள் சீக்கிரமாக பூப்பெய்துகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இப்படி அதீதமாய் பாலூட்டி வளர்த்த கிளிகள் தான் பாவம் சிறு வயதிலேயே பூப்படைகின்றனர்.  


பால் மட்டுமல்ல, பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். அளவுக்கு அதிகமாய் மில்க் சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தர வர்க்கத்தில் அதிகம். மில்க் சாக்லேட்” என்று


ஓவர் வெயிட்டாக இருக்கும் குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றனர் என்கிறது ஆய்வு. இது போன்ற குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் மறுசுழற்சி அடைவதில்லை எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.  சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும், சீக்கிரம் பூப்பெய்துவதற்கும் அதிகப்படியான இடையே முக்கியக்காரணம்.

 

மாட்டுப்பாலினால் ஏன் தீமை?

மாடு கூடுதலாகப் பால் பீச்ச RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்ப்பதை மேனாட்டு FDA எனப்படும் உணவு மற்றும்    மருந்துகள் ஒழுங்கு ஆணையமே அங்கீகரித்திருக்கிறது.இந்த ரசபக்ஹ் (recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.

 

2. பிராய்லர் கோழி :

தற்போது பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8 வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள்.காரணமாகின்றன . பகட்டாக இருக்கும்  கோழிக்கடைகளில் வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவது  நாகரீகமென்று ஆகிவிட்டது. அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நாட்டுக் கோழியை கொடுக்கலாம் அதுவும் அளவோடு. வளரும் பிள்ளை தானே என்று அளவுக்கு அதிகமாய் கொடுக்கும் எதுவும் ஆபத்தே. 

 

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட விலங்கு இறைச்சிகளில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது வாடிக்கையானதாகிவிட்டது.  இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம் என மேல்நாடுகளில் சண்டையே நடந்து வருகிறது. melnaattu உணவுகள் இறக்குமதி செய்வதில் இப்போது தான் இந்தியம் paduvekam காட்டுகிறதே. எனவே நம் குழந்தைகளின் நோயும் அதே வேகத்தில் தான் வருகிறது.

 

 


4. ஓட்ஸ் உணவுகள்:

வணிக உத்திகள் காரணமாக எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. வேலைக்கு செல்லும் பல தாய்மார்களின் தேசிய உணவு இது தான். ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் மெலியும் என்ற அர்த்தமற்ற செய்தியும் விரைவாகப் பரவுகிறது . இந்த ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது. ஐஸோஃப்லாவின்ஸ், லிக்னைன் சத்துக்கள் அதிகமுள்ள எந்த தாவரமும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் உடலுக்கு தரக் கூடியவை அந்த வரிசையில் ஓட்ஸ் உள்ளது.

 

 

II. மரபியல் காரணங்கள்:

மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது விரைவான பூப்படைதலுக்கு ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும்).



விரைவான பூப்பால் நேரிடும் பெரும் அபாயம்:

மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது மார்பகப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவ உலகம் திணறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு கூடுதல் செய்தி.. விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.



மருத்துவ ரீதியில் வகைப்படுத்தப்பட்ட காரணிகள்:

பெண்கள் அதிவிரைவில் பூப்படைவதை மருத்துவரீதியாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். பிட்யூட்டரி சுரப்பி சார்ந்து வருவதை, `சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Central precocious puberty) என்றும், பிட்யூட்டரி சுரப்பி தொடர்பு இல்லாமல், நேரடியாக ஹார்மோன் தொந்தரவுகளால் வருவதை `பெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Peripheral precocious puberty) என்றும் வகைப்படுத்தலாம். 


இவ்வகையான பிட்யூட்டரி சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஒழுங்கற்ற உணவுமுறையும் வாழ்வியலுமே காரமென்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.



தாமதித்த பூப்படைதல்:

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், இயக்கங்கள், தூண்டுதல்கள்  அனைத்திற்கும்  ஹார்மோன்களே  மூல  காரணங்களாக  இருக்கின்றன. ஹார்மோன்களுக்கே  தலைபோல்  விளங்குவது, பிட்யூட்டரி  என்ற  சுரப்பி.  இதை  மூளையில் உள்ள  தலாமஸ்  என்ற  பகுதி கட்டுப்படுத்துகிறது.  


இது  நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச் செய்கிறது. பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம் பிக்கும். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச்செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும். சினைமுட்டைகளைத் தூண்டி முதிர் வடையச் செய்யும். இன்னொரு ஹார்மோன் முதிர்ந்த முட்டையைவெளியிடச் செய்யும். பூப்படையும் பருவத்தில் பெண் ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பில் ஏற்படும் அளவு வேறுபாடும் பூப்படைதலை பாதிக்கிறது. 

 

 

உடல் பலகீனம், ரத்த சோகை, காலையில் பாதம் வீங்குதல்- மாலையில் கணுக்காலில் வீங்குதல் போன்ற கோளாறு கொண்ட பெண்களும் பூப்படைவது தாமதமாகும்.



தன்னுடன் படித்த எல்லா பெண்களும் பூப்படைத்தவர்களாக இருக்கும் போது, தாமதமாய் பூப்படையும் குழந்தையிடம், "தனக்கு எதுவும் நோய்  வந்துவிட்டதோ" என்ற பயம் வருவது இயல்பு. எந்த குழந்தைக்கும் அதே நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, சரியான சிகிச்சை பெறுவதன்மூலம் பூப்படைதல் சாத்தியமாகும். 



மொத்தத்தில்  சுருக்கமாக சொல்வதானால், முறையான பூப்படைதலுக்கு உணவுமுறையும், வாழ்வுமுறையுமே முக்கியம். `அதிகமாகப் பழங்களையும் காய்களையும் சாப்பிடுவதால், பூப்பெய்தல்  முறைப்படுத்தப்படும்’ என்கிறது `தி நியூ பியூபெர்ட்டி’ (The New Puberty) எனும் ஆய்வுப் புத்தகம். இளம் வயது முதலே நொறுக்குத்தீனிகளுக்குத் தடைவிதித்து, இயற்கையான பழங்களையும் காய்களையும் சாப்பிடச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை அதிக நாள்களுக்கு அருந்திய குழந்தைகளுக்கும், பூப்படைதல் சரியான வயதில் நடைபெறும்’ என்கிறது அதே ஆராய்ச்சி. குறைந்தது ஒரு வருடமாவது  பள்ளிகளிலும், வீடு திரும்பிய பின்னர் மாலை வேளைகளிலும் ஓடியாடி விளையாடும்படி குழந்தைகளை ஊக்கப்படுத்துவது முக்கியம் . இளம் வயதில் உடல் பருமன் ஏற்பட்டு, ஹார்மோன் சீர்கேடுகள் உண்டாவது பெருமளவில் தடுக்கப்படும். மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகள் வளர்வதும் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும் குழந்தைகளின் பருவமடைதல் காலத்தை முறையற்றதாக்கும்.

 

 

 

 

Next Story

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:

 

 


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 


சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21
 

 

 

Next Story

சிசேரியன் எப்போது செய்யவேண்டும்!!! வழியெல்லாம் வாழ்வோம் #22

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
vazhiyellam vaazhvom

 

 

சிசேரியன் பேறுகாலம்:


சுகப்பேறுகாலம் கடினமானது என்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை வலியில்லாதது- எளிதானது என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் இக்காலத்தில் சிசேரியன் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில போலித்தகவல்கள் பற்றி அறிவது அவசியம். சுகப்பேறுகாலம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் தான் சிசேரியன் முறை இன்று அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது எனவும் தெரிகிறது.

 

 


ஏன் அதிகரிக்கிறது சிசேரியன்?


பெண்களின் புரிதலின்மை:


சுகப்பேறுகாலம் பற்றிய புரிதலின்மை பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மேலும் பேறுகால வலியை தாங்கிக்கொள்ள இயலாத மனதிடமற்ற பெண்களின் குணாதிசயங்களும் இதற்கு இன்னொரு காரணம்.


மருத்துவர்களின் இக்கட்டான சூழ்நிலை:


மேலும் சுகபேறுகாலத்துக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களும், கொஞ்சம் மெனக்கெட்டு ஆபத்தென்றாலும் எதிர்கொள்ளத் தயங்கும் மருத்துவர்களின் எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணங்கள். மருத்துவர்களை குற்றம் சொல்வதிலும் பலனில்லை. ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் ௫ என்று நிர்ணயித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மருத்துவர்களுக்கு உள்ளது. இந்த மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகித இலக்கினை கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. இதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள மருத்துவர்கள் முனைகின்றனர். சுகபேறுகாலத்துக்கு பெண்கள் ஒத்துழைக்காத நிலையில் சிசேரியன் தாய்-சேய் நலத்தை பேணுவதற்கு அவசியமாகிறது. Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு பயந்தும் மருத்துவர்கள் சிசேரியனுக்கு தள்ளப்படுவதும் சில நேரங்களில் நடக்கிறது.


நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஆகிப்போன இந்த காலங்களில் அந்தக் குடும்பத்தின் சேயை நலமாக குடும்பத்திடம் ஒப்படைக்கும் கடமை தங்களை சார்ந்தது என்று மருத்துவர்கள் முழுமையாய் நம்புகின்றனர். அந்த சமூக அக்கறையை அழுத்தத்துடன் அவர்களே சுமக்கின்றனர்.

 

 


தனிக்குடித்தனங்கள்:


Nuclear Family எனப்படும் தனிக்குடித்தனங்கள் வாடிக்கையாகிப்போன காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்மையுற்ற காலம் முதலே பேறுகாலத்துக்கு தயாராக்கும் மூத்த பெண் உறவுகள் உடன் இருப்பதில்லை. அதனால் உடல், மனதளவில் பெண்கள் பேறுகாலத்து சரியாய் தயாராவதில் சிக்கல் நிலவுகிறது. 

 

 



சிசேரியன் அறுவை சிகிச்சை வகைகள்:


1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).

2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).


முன்னரே தேர்தெடுக்கப்படும் சிசேரியனுக்கான காரணங்கள்:


செயற்கை முறை கருத்தரிப்பு:

வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதனால் மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணம். 'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன உளைச்சல் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இது போன்ற சமயங்களில் பரிந்துரைக்கிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட கரு:


ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.


தாய்மையுற்ற பெண்ணின் உடல் சார்ந்த காரணிகள்:


இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, தாமதிக்க கர்ப்பம், சில தொற்று நோய்கள் ஆகிய காரணங்களாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.


குழந்தையின் நிலை:


Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.


வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm). குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

 

 


ஒரு தாய்க்கு செய்யப்படும் இரண்டாவது சிசேரியன்:


Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

இவை அனைத்தும் High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகின்றன.


அவசரநிலை சிசேரியன்:


Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் முறை; குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்பகால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் வலிப்பு,  நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.


வலுக்கட்டாய சிசேரியன்  (On demand Caesarean) 


இது இப்போது மிக அதிகமாகத்தென்படும் ஒரு மூட நம்பிக்கை சார் பேறுகாலம். சோதிடத்தை நம்பி, குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட லக்கினத்தில் தங்கள் குழந்தை பிறந்தால் அது பெரும் புகழும் வாங்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி அறுவைசிகிச்சை செய்ய விழைவோர் பலர். இதற்கு அரசு மருத்துவமனைகளில் சத்தியம் இல்லாததால், தனியார் மருத்துமனைகளுக்கு செல்லும் கூட்டம் அதிகமாயிருக்கிறதும் நடக்கிறதாம்.


FOGSI போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமும் பெண்களுக்கு உண்டு.


முடிவுரை:


பெண்களின் பிற பருவங்கள் சார்ந்த பொது விடயங்கள் பலவற்றையும் முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதிகளில் விரிவாகப்பேசியாகிவிட்டது. எனவே உடலினை கோவிலாகப் பாவித்து உள்ளத்தை இறைமையாகப் பாவித்து நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் வாழ்வோம்- வாழ்வாங்கு வாழட்டும் தலைமுறை. 

 

 

முந்தைய பகுதி:

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21