Skip to main content

கிலோய் மூலிகையின் ஆறு அற்புத பலன்கள்..!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

giloy herb benefits and uses

 

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். ஏனென்றால், கிலோய் ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். இது இந்திய மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு காலங்காலமாக, தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான வெளிநாடுகளிலும், இந்தியர்களால் அதிகமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது.

 

கிலோய் என்றால் என்ன?

கிலோய் என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதய வடிவில் இலை கொண்டிருக்கும் இந்தச் செடி, பல விநோன சக்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சமஸ்கிருதத்தில், கிலோய் 'அமிர்தா' என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கிலோய்க்கு சீந்தில் (டினோஸ்போரா கார்டிபோலியா) அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

கிலோய் பல உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய மிகவும் பயனுள்ள மற்றும் பல்துறை ஆயுர்வேத மூலிகையாகவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் லாக்டோன்களையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது மற்றும் நச்சுத்தன்மையை அகற்றி, இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. 'கிலோய்' இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வல்லுநர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உங்கள் செல்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.  

 

கீல்வாதம்:

கிலோய் மூலிகையில், கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க உதவும் ஆர்த்ரைடிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும், இது மூட்டுவலிக்குச் சிறந்த மருந்தாகி உடலுக்குப் பல நன்மைகளை அளிக்கிறது. கிலோயில் மூட்டுவலி நீக்கம் மற்றும் அதன் பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களுக்கு காணப்படும் முக்கிய அறிகுறிகளான விறைப்பு போன்றவற்றைக் குணப்படுத்த, தினமும் கிலோய் ஜூஸ் குடிப்பது சிறந்தது.

 

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயாளிகள், கிலோய் (சீந்தில்) உட்கொள்வதால் பெரிதும் பயனடைவார்கள். 'கிலோய்' உங்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. கிலோய் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை எரிக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் முடியும். நீரிழிவு என்பது உங்கள் உடலின் இன்சுலின் அளவைக் குறைக்கும் ஒரு நிலை. இது, பொதுவாக நடுத்தர வயது முதல் முதியவர்கள் வரை காணப்படுகிறது. கிலோயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை, இரத்தச் சர்க்கரை குறைப்பானாகச் செயல்பட்டு நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கிலோய் சாறு அதிக அளவு இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.

 

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

மாறிவரும் நவீன வாழ்க்கை முறையில், சரியான உணவுப் பழக்கத்தைப் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. ஒழுங்கற்ற வாழ்க்கை முறை பிரச்சனைகள் காரணமாக, நம்மில் பெரும்பாலோர் மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தால் பாதிக்கப்படுகிறோம். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில், கிலோய் மூலிகை எடுத்துக்கொள்வது உடலின் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

 

சுவாச பிரச்சனைகள்:

கிலோய் மூலிகை சுவாசப் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்குக் காரணமாக இருப்பதால் சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. கிலோயில் இருக்கும் அதிக மருத்துவ குணங்கள், நமக்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் கிலோய் மூலிகை  அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும்.

 

நாள்பட்ட காய்ச்சல்:

கிலோய் மூலிகைக்கு எந்தப் பக்க விளைவுகளும் இல்லாததால், டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவற்றிற்கு உதவுவதற்காக இந்த மூலிகையானது வழங்கப்படுகின்றது. இது இயற்கையிலேயே உடல் வெப்பத்தணிப்பைக் குறைப்பதால் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை உயர்வாக வைத்திருக்க உதவுகிறது.

 

கிலோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகையாக இருப்பினும், நீங்கள் இதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடனே உட்கொள்வது அவசியம். நாள் ஒன்றுக்கு 20 மில்லி (ML) கிலோய் சாறுக்கு (பொடியாக இருப்பின் 5 கிராம்) மேல் உட்கொள்ளக்கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நீங்கள் கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ, கருத்தரிப்புக்கு முயற்சிப்பவராக இருந்தாலோ இதனை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.