Skip to main content

கேன்சரைக் கட்டுப்படுத்தும் போலியோ வைரஸ்! 

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயால், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். தீவிர மருத்துவ சிகிச்சை, சொட்டு மருந்து என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம், தற்போது போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையே பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அந்தளவுக்கு கொடிய, வாழ்க்கையை முடக்கிப்போடும் போலியோவின் வைரஸைக் கொண்டு, இன்னொரு உயிர்க்கொல்லி நோயான கேன்சரைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 

polio

 

போலியோ வைரஸ் செலுத்தப்பட்ட மூளை, படிப்படியாக குணமாகும் விளக்கப்படம்

 

 

 

மூளைக்கட்டி அல்லது கிளியோப்ளாஸ்டோமஸ் எனப்படும் புற்றுநோய், மூளையில் உருவாகும் கட்டியால் ஏற்படுகிறது. இந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், நீண்டகாலத்திற்கு வாழ முடியாமல் இறந்துவிடுகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, மரபணு மாற்றப்பட்ட போலியோ வைரஸ் மூலம் சில காலம் நீடித்து வாழச்செய்வதற்கான ஆராய்ச்சியை அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். 
 

சேகரித்து வைக்கப்பட்ட போலியோ வைரஸை, நரம்பு மண்டலத்தைப் பாதிக்காதவண்ணம் மரபணு மாற்றம் செய்து, அதை பாதிக்கப்பட்டவரின் மூளையில் செலுத்தி சில சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த சோதனையில், மற்ற எந்த பரிசோதனையின் மூலமும் இல்லாத அளவிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதாவது, மூளைக்கட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் சோதனைக்காலத்தில் மூன்று ஆண்டுகாலம் வரை உயிரோடு இருக்கிறார். இந்த சோதனை முழுமையடைந்தால், மூளைக்கட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை முழுமையாக குணப்படுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர் அறிவியலாளர்கள். 
 

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

100 ரூபாயில் மருத்துவப் புரட்சி; டாடாவின் மைல்கல் சாதனை  

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
100 rupees to cure cancer; Tata's milestone achievement

உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.

100 rupees to cure cancer; Tata's milestone achievement

இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.