Skip to main content

"தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசு பள்ளி"

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

மாவட்டத்தில் முதன்மை மாதிரி பள்ளியாக தேர்வு செய்த அரசு பள்ளியில் தலைமையாசிரியர் தரையில் அமர்ந்து மாணவர்களை வழிநடத்தும் செயல் பெற்றோர்களை பிரம்மிக்க வைக்கின்றது. "கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப்பதிலாக காமராசர் வாழ்த்து பாடலாம்" என்றார் தந்தை பெரியார்.கல்விக்காக பல்வேறு சலுகைகளை அளித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற காரணத்தால் காமராசர் பிறந்தநாளை ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். தேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு மாவட்டத்திலேயே மதன்மை மாதிரி பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி இயங்கி வருகின்றது.அரசு பள்ளியை கண்டு விலகிச் சென்ற பெற்றோர்கள் இப்பள்ளியை கண்டு பெருமிதம் கொள்கின்றனர். தங்களது குழந்தைகளை இப்பள்ளியை தேடிவந்து சேர்க்கும் அளவிற்கு பெருமையை சேர்த்துள்ளது இப்பள்ளி.மாதம் ஒருமுறை பெற்றோர் அழைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி பெற்றோர்களின் நிறை குறையை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

government school

பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தப்பட்டு மிகவும் சரியான பராமரிப்போடும் இயங்கி வருகின்றது. இதனால் பெண்கள் மாதவிடாய் பிரச்னை காலங்களில் சந்திக்கக்கூடிய பரச்னைகளை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.சுமார் 10 ஏக்கர் பரப்பளவை கொண்ட இப்பள்ளியில் நூலகம்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிசிடிவி கேமரா, நவீன கணினி ஆய்வகம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் (நபார்டு வங்கி நிதி உதவி ஆர்ஐடிஎப் திட்ட ஆண்டு 2014-2015) கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இப்பள்ளி. இப்பள்ளி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது அதில் சில : 1.சிறந்த பள்ளிக்கான விருது-2018 2.பசுமை பள்ளிக்கான விருது-2018 3.தூய்மை பள்ளிக்கான சான்று- 2017.

government school

போன்ற பல்வேறு விருதுகளை பெற்று தனியார் பள்ளிகளுக்கு ஒரு சவாலாக விளங்குகிறது.
இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக வந்த மாணவர்களை அப்பள்ளி தலைமையாசிரியர்  திரு.மோகன் அவர்கள் வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து மாணவர்களை வரவேற்றார்.கல்விக்கு  மட்டும் முன்னூரிமை அளிக்காமல் விளையாட்டு , இசை, ஓவியம் , தற்காப்புக் கலைகள் என பண்பாட்டு ரீதியாக அனைத்திலும் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பல விருதுகளை பெற்று பெருமிதம் கொள்கின்றனர் ஆசிரியர்கள்.

government school

கல்வியோடு இயற்கையை மேம்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பேனிப்பாதுகாத்து வருகின்றனர்.அரசியலில் மாணவர்களின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு தலைமையாசிரியர் பதவி பிரம்மாணம் செய்து வைக்கின்றார்.தேர்தவை பற்றி தலைமையாசிரியர் கூறுகையில் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் பாடத்தையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பதவிகளிலுள்ள மாணவர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர்.குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்க்கும் மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பள்ளி வளாகத்தில் சுகாதார ரீதியாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்கின்றனர். இத்தேர்தல் மூலம் மாணவர்கள் வருங்காலங்களில் சிந்தித்து செயல்படுவார்கள் என்பதே இதன் நோக்கம் என்கின்றார்.

தலைமையாசிரியர் திரு.மோகன் அவர்கள் மற்ற அரசு பள்ளிகளுக்கு விடுக்கும் மிகப்பெரிய வேண்டுகோள் மாணவர்களுக்கு பணியாற்றுவதற்காக தான் நாம் ஊதியம் பெறுகின்றோம். முதலில் மாணவர்களிடம் நெருங்கி பழகும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலை முதலில் அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் நாம் செயல்பட்டால் நிச்சயமாக அவர்களிடம் இருந்து ஒரு வெற்றியை நாம் எதிர்பார்க்கலாம் என்பதே என் வேண்டுகோள்.

 


பா.விக்னேஷ் பெருமாள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.