Skip to main content

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம்! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

Aadipuram in Samayapuram Mariamman Temple!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்தக் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வழிபாடு செய்வார்கள்.

 

இக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இவ்வருடம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 6 மணிமுதல் கோவிலில் பெண்கள் கூட்டம் அம்மனை தரிசிக்க அலைமோதியது. காலை 9 மணியளவில் கர்ப்பிணி பெண்கள் கோவிலின் முன்பு உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சுமங்கலி பெண்கள் அம்மனை வணங்கிவிட்டு கையில் வேம்பு இலை நரம்பு கொண்டு கட்டிவிட்டனர். கோவில் குருக்கள் அமாவாசை, அம்மனுக்கு படைத்த வளையல்களை கர்ப்பிணி பெண்கள் கையில் அணிவித்தார். அதன்பிறகு பெண்கள் அங்குள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வளையல் அணிவித்தனர். அம்மனுக்கு தீபாராதனை காண்பித்த பின்பு கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் அட்சதை போட்டு வாழ்த்தினார்கள். 

 

இதுகுறித்து கோவில் குருக்கள் அமாவாசை கூறும்போது, “குழந்தை வரம் வேண்டுவோர்களுக்கு அம்மன் வயிற்றில் கட்டிய கம்புபயிரை பிரசாதமாக கொடுக்கிறோம். குழந்தை பிறந்தவுடன் அவர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு செல்கின்றனர்” என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.