Skip to main content

சீக்கிரம் உலகம் அழியப்போகிறது?

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
2012


மாயன் காலண்டரில் சொல்லப்பட்டவை அனைத்தும், நிஜமாக இந்த உலகில் நடந்து வருகிறது. ஆனால், மாயன் காலண்டரோ 2012க்கு அடுத்து எதுவும் சொல்லப்படவில்லை அதனால் இந்த உலகம் 2012க்கு பின் அழிந்துவிடும் என்றெல்லாம் ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. அதை வைத்து 2012ல் உலகம் அழிந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஹாலிவுட் படமும் எடுக்கப்பட்டு, மக்கள் அனைவரையும் அச்சப்படுத்தியது. மாயன் காலண்டரில் சொல்லப்பட்டதுபோல் 2012ல் இந்த உலகம் அழியாது என்று அப்போது பல அறிவியலாளர்கள் சொன்னார்கள். ஆனால், இந்த உலகம் அழியும், அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் இந்த உலகில் வாழும் மனிதர்களாகிய நாம்தான் என்றனர். இந்த பூமியில் உள்ள இயற்கையை, நவீனம் என்ற பெயரில் மனிதர்கள் அழித்து வருகிறார்கள். அதுதான் இந்த உலகை அழிக்க காரணமாக அமையும் என்று பல ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கிறது. தற்போது சீக்கிரம் இந்த உலகம் அழியப் போகிறது என்று அறிவியலாளர்கள் ஒரு ஆய்வில் எச்சரித்துள்ளனர்.
 

நினைத்ததை விட அதிக வேகத்தில் கடல் நீர் வெப்பம் அதிகரிக்கிறது என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் இருக்கும் வெவ்வேறு கடல் பரப்பில் மூன்றாயிரத்தி தொல்லாயிரம் மிதவைகள் உதவியோடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் 1971 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கடலில் 2000மீட்டர் ஆழத்தில் 0.1 டிகீரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்கள் குளிரான இடங்களை தேடி இடம்பெயர்கின்றன. கடல் நீரில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, கடல் நீரில் ஆக்சிஜன் குறைந்துகொண்டே வருகிறது. இது பவள பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வையும் கடுமையாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனுடன் வெப்பமான கடல் பரப்பிலிருந்து வெளியேரும் ஈரத்தன்மை, சக்தி வாய்ந்த புயல்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பல காரணங்களால்  சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகன எரிபொருளுக்கு மாற வேண்டும் என்றும் அறிவுருத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

தொடரும் தாக்குதல்; 3 லட்சம் காசா மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Continued attack; 3 million Gazans evacuated as refugees

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இந்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இஸ்ரேல் போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவில் இருந்து சுமார் 3.38 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காசாவில் 22 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 11 சதவிகித மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதும் தீவிர தாக்குதல் தொடர்ந்து வருவதால் காசாவில் மீதம் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.