Skip to main content

அதென்ன அஃபெலியன் நிகழ்வு... அப்போ இனி குளிர் மட்டும்தானா?-விளக்கமளித்த விஞ்ஞானிகள்!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

What is the Aphelion phenomenon... Is it just cold now?-Explained by scientists!

 

இன்று காலை முதல் அஃபெலியன் நிகழ்வு தொடங்கி விட்டதாகவும், இதனால் பூமியில் வழக்கத்தைவிட குளிர் அதிகரிக்கும் என்றும், உடல் உபாதைகள் அதிகரிக்கும் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இன்று அதிகாலை 5.27 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், இதனால் காலநிலை கடந்த ஆண்டுகளை விட குளிராக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் மனிதர்களுக்கு தொண்டை வலி, சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் உலா வந்த தகவல்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

What is the Aphelion phenomenon... Is it just cold now?-Explained by scientists!

 

இந்நிலையில் இவை உண்மையா? அஃபெலியன் நிகழ்வு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அறிவியல் நிறுவனம் மற்றும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கத்தில் ''பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரி தூரம் 9 கோடி கிலோமீட்டர் என்றும், அஃபெலியன் ஃபினாமினன் நிகழ்வு காலத்தில் இந்த தூரமானது 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரிக்கும் என்றும், இதனால் மனிதர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் போலியான செய்தி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர். இதுதான் உண்மை. அஃபெலியன் ஃபினாமினன் நிகழ்வு காலத்தில் சூரியனிடமிருந்து பூமி 152 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். அதாவது 2 மில்லியன் கிலோமீட்டர் தான் வித்தியாசம். இந்த வித்தியாசம் மனிதர்களுக்கு எந்த உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாது'' என விளக்கமளித்துள்ளனர் விஞ்ஞானிகள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.