Skip to main content

”வரி கட்டினாயா?” - “அட்வான்ஸா கட்டிட்டேன்” - நேருக்கு நேர் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடென்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

 

usa president election final debats trump vs joe biden

 

நவம்பர் 3- ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடெனின் இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்றது.

 

ஜோ பிடென் : கரோனாவை எதிர்த்துப் போராட ட்ரம்பிடம் எந்தத் திட்டமும் இல்லை.

 

டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர்; அமெரிக்காவில் கரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.

 

usa president election final debats trump vs joe biden

 

ஜோ பிடென் அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கரோனாவால் இறப்பார்கள்.

 

டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு கரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான்; இந்தாண்டு இறுதிக்குள் கரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும். 

 

ஜோ பிடென் : சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக் கணக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

 

டொனால்ட் ட்ரம்ப்: சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.

 

ஜோ பிடென் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை.

 

டொனால்ட் ட்ரம்ப்: கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன். பிடென் குடும்பம் தவறான வழிகளில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எனது வங்கிக் கணக்குகள் அனைத்தும் வெளிப்படையானவை.

 

usa president election final debats trump vs joe biden

 

ஜோ பிடென் : தவறான வழிகளில் ட்ரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது; ட்ரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.

 

டொனால்ட் ட்ரம்ப்: வட கொரியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம். வட கொரியா விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்; வட கொரியா விவகாரத்தை ட்ரம்ப் ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார்.

 

cnc

 

ஜோ பிடென் : வட கொரிய அதிபர் கிம் நல்ல மனிதர் என ட்ரம்ப் கூறியிருந்தார்; ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பானது. தனியார் நிறுவன காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவேன். அதிபர் ட்ரம்பால், அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்து விட்டனர்.


டொனால்ட் ட்ரம்ப் : சீனா, ரஷ்யாவை போல் இந்தியாவிலும் காற்று மாசடைந்து உள்ளதாக குற்றம்சாட்டினார். 

 

டொனால்ட் ட்ரம்ப் : வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி அனுமதியளிக்கவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.