Skip to main content

”வரி கட்டினாயா?” - “அட்வான்ஸா கட்டிட்டேன்” - நேருக்கு நேர் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடென்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

 

usa president election final debats trump vs joe biden

 

நவம்பர் 3- ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடெனின் இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்றது.

 

ஜோ பிடென் : கரோனாவை எதிர்த்துப் போராட ட்ரம்பிடம் எந்தத் திட்டமும் இல்லை.

 

டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர்; அமெரிக்காவில் கரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.

 

usa president election final debats trump vs joe biden

 

ஜோ பிடென் அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கரோனாவால் இறப்பார்கள்.

 

டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு கரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான்; இந்தாண்டு இறுதிக்குள் கரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும். 

 

ஜோ பிடென் : சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக் கணக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

 

டொனால்ட் ட்ரம்ப்: சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.

 

ஜோ பிடென் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை.

 

டொனால்ட் ட்ரம்ப்: கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன். பிடென் குடும்பம் தவறான வழிகளில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எனது வங்கிக் கணக்குகள் அனைத்தும் வெளிப்படையானவை.

 

usa president election final debats trump vs joe biden

 

ஜோ பிடென் : தவறான வழிகளில் ட்ரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது; ட்ரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.

 

டொனால்ட் ட்ரம்ப்: வட கொரியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம். வட கொரியா விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்; வட கொரியா விவகாரத்தை ட்ரம்ப் ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார்.

 

cnc

 

ஜோ பிடென் : வட கொரிய அதிபர் கிம் நல்ல மனிதர் என ட்ரம்ப் கூறியிருந்தார்; ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பானது. தனியார் நிறுவன காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவேன். அதிபர் ட்ரம்பால், அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்து விட்டனர்.


டொனால்ட் ட்ரம்ப் : சீனா, ரஷ்யாவை போல் இந்தியாவிலும் காற்று மாசடைந்து உள்ளதாக குற்றம்சாட்டினார். 

 

டொனால்ட் ட்ரம்ப் : வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி அனுமதியளிக்கவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.