Skip to main content

குறைந்த எரிபொருள்... செயலிழந்த பாகங்கள்... 370 உயிர்கள்... என்ன நடந்தது?

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

அரசுத்துறை விமானசேவை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில மாதங்களாகவே தனியார் துறையாகிவிடுமோ என்ற நிலையில் உள்ளது. கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்கா, நியூயார்க் விமான நிலையமான 'ஜான் எஃப் கென்னடி' விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்றை தரையிறக்க முயற்சிக்கும்போது  பல சவால்களை சமாளித்து 370 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, விமான கேப்டன்களான பாலியா, சுசாந்த் சிங், டி.எஸ். பாட்டியா மற்றும் விகாஸ் ஆகியோரின் திறமையான செயலால் பாதுகாப்பாக அருகில் உள்ள நியூவெர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சமபவத்தின்போது நடந்த உரையாடலையும்  விமானிகள் எதிர்கொண்ட சவாலையும் சொல்லும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.

 

Air India

 

டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடியாக 15 மணிநேரம் தொடர்ந்து பயணிக்கக்கூடிய 'ஏஐ 101' விமானம் கடந்தவாரம் 11-ஆம் தேதி நியூயார்க் நகரத்தை சென்றடைந்தது. தரையிறங்க தயாராகும் நேரத்தில், முதலில் விமானத்தை தரையிறக்கும் தானியங்கி செயல்படாமல் போனது. அதை கவனித்த விமானிகள் உடனடியாக நியூயார்க்கின் விமான நிலைய, விமான போக்குவரது கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிலைமையை அறிவித்தனர். 

 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமான நிலைய அதிகாரிகள், கவலையுடன் 'விமானத்தில் எத்தனை உயிர்கள்  இருக்கின்றன?' என்று கேட்கின்றனர். விமானத்தில் 370 பயணிகள் என்று சொல்ல பதற்றமடைந்த அதிகாரிகள் எரிபொருளின் அளவை கேட்கிறார்கள். 7,200 கிலோ எரிபொருள் இருப்பதாக ஏர் இந்தியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இங்கு வானிலை மோசமாக உள்ளதால் இந்த சூழ்நிலையில் விமானத்தை தரையிறக்குவது கடினமான விஷயம், அதனால் அருகில் உள்ள நியூவெர்க் விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வருகிறது. இப்படியே அரை மணிநேரமாக விமானம் தரையிறங்காமல் இருக்க, உள்ளே இருந்த பயணிகள் பதற்றமடைகிறார்கள். அவர்களையும் அமைதிப்படுத்தி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் சவாலை எதிர்கொள்கிறார்கள் விமானிகள். எரிபொருளின் அளவும் தொடர்ந்து சரிந்துகொண்டே வர, அதன் பின் விமானத்தின் சில முக்கிய எந்திரங்களும் பழுது அடைய துவங்கியுள்ளது. வேறு வழியின்றி எப்படியும் உள்ளிருக்கும் 370 பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று விமானிகள் (மேனுவல் முறை) என்னும் கடினமான பழைய முறையில் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கி தங்களை நம்பிப் பயணித்த 370 பயணிகளையும் பாதுகாப்பாக நியூஜெர்சியில் உள்ள நியூ ஆர்க்  விமான நிலையத்தில் தரையிறக்கினர். 

 

குறைந்த எரிபொருள், பழுதான எந்திரங்கள், மோசமான வானிலை, பதற்றமான சூழ்நிலை... இவையனைத்தையும் எதிர்கொண்டு பயணிகளை பத்திரமாக இறக்கிய விமானிகளை அனைவரும் பாராட்டுகின்றனர். இந்தத் திடீர் கோளாறு ஏற்பட என்ன காரணமென்பதை விசாரித்து சரிசெய்ய வேண்டுமென்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. நஷ்டத்தில் இயங்குவதால், தமிழக அரசு பேருந்துகள் எப்படியிருக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அது போல, நஷ்டத்தைக் காரணமாக வைத்து விமானங்கள்  அப்படியாகிவிடக்கூடாதல்லவா...  

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.