Skip to main content

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

Sri Lankan parliament dissolution

 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

அதிபர் மைத்ரிபால சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

ராஜபக்சே புதிதாக பிரதமராக பதவியேற்ற நிலையில் வரும் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட இருந்தது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் வீட்டையும் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்... ரணில் எடுத்த முடிவு?

Published on 09/07/2022 | Edited on 09/07/2022
stuggler's who seized the Prime Minister's house... Ranil's decision?

 

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் இலங்கை அரசியலமைப்பு விதிகளின்படி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்தன தற்காலிக அதிபராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை உருவாக்க வேண்டும் என்றும், அதிபர் கோட்டாபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என பெரும்பாலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது.

 

stuggler's who seized the Prime Minister's house... Ranil's decision?

 

ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுப்பதாக தகவல் வெளியாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அடுத்தபடியாக ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்குள் புகுந்துள்ளனர். முற்பகல் கோத்தபய ராஜ்பக்சேவின் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் தற்பொழுது ரணில் விக்ரமசிங்கே வீட்டை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகி, அனைத்து கட்சிகள் கொண்ட அரசு பதவியேற்க வழிவகை செய்ய தயார் என ரணில் விக்ரமசிங்கே சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவி விலகல் தொடர்பான தனது முடிவை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே. அதில் 'மக்களின் நலன் கருதி  அனைத்து கட்சிகள் கொண்ட அரசைக் கொண்டுவர முடிவு செய்துள்ளேன்' என தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

Next Story

ஓட்டம் பிடித்த ராஜபக்சேக்கள்... இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

Who will be the next President of Sri Lanka?

 

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, ராணுவம், பொதுப்போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. பொதுப்போக்குவரத்து  தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மஹிந்த ராஜபக்சேவும் ஓட்டம் பிடித்த நிலையில் அவரது வீட்டையும் போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்திய காட்சிகள் வெளியாகி இருந்தது.

 

இதனிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள சொகுசு கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் இலங்கை அரசியலமைப்பு விதிகளின்படி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்தன தற்காலிக அதிபராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை உருவாக்க வேண்டும் என்றும், அதிபர் கோட்டாபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என பெரும்பாலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுப்பதாகவும், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அடுத்தபடியாக அவரது இல்லத்தை முற்றுகையிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.