Skip to main content

ஆணும் பெண்ணும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவு உண்ண தடை!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

 

ACT

 

 

 

இந்தோனேசியா, பெண்கள் மணமானவர்களுடன் அல்லது உறவினர்களுடன் மாட்டுனம்தான் உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியும் அப்படி இல்லையென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியாது மேலும் இரவு 9 மணிக்கு மேல் தனியாக சாப்பிட வரும் பெண்களுக்கு ஓட்டல் உணவு தரக்கூடாது எனவும் சட்டம் விதித்துள்ளது.இது பெண்களுக்கு தங்களை பாதுகாத்து கொள்ள உதவும் எனவும் அறிவித்துள்ளது.

 

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் உலகின் மிக அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஆஸெஹ் மட்டுமே இடம்பெற்றுள்ளது, பெண்களுக்கு ஒழுக்கநெறிகளைக் கொடுத்ததற்காக கடந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது. மேலும் பெண்கள் மீதான தார்மீக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஓரினச்சேர்க்கை, சூதாட்டம் மற்றும் குடிப்பழக்கம் போன்ற குற்றங்களை எதிர்த்து உலகளாவிய கண்டனத்தை தெரிவித்து அதனால் உலகநாடுகள் கவனத்தை ஈர்த்த நாடு.

 

 

சமீபத்திய கட்டுப்பாட்டின் கீழ், சுமத்ரா தீவில் உள்ள பிரௌன் மாவட்டத்தில் உள்ள பெண்கள், அவர்களது கணவர் அல்லது ஒரு நெருங்கிய ஆண் உறவினர்கள் அல்லாத வேறு ஒருவருடன் உணவகங்கள் மற்றும் காபி கடைகளில் ஒரே மேஜையில் அமர்ந்து உணவு பகிர்ந்து கொள்ள முடியாது. அதேபோல் மதிய உணவு இடைவேளையின் போது ஆண் பெண் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்றாலும் ஒரே மேஜையில் சாப்பிட முடியாது எனவும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

 

 

இந்தகட்டுப்பாட்டினால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள், ஆனால் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது வரம்புக்குட்பட்டதாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாகாண தலைநகரான பண்டா ஆஸெஹ்வில் இரவு 11 மணிக்குப் பின் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களிலிருந்து பெண்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
nn

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.