Skip to main content

மந்திர கோலுடன் வலம் வரும் மகிந்த ராஜபக்சே! அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
rajabaksha




தமிழக அரசியல்வாதிகளைப் போல, இலங்கையின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சேவும் மாந்த்ரீகம், ஜாதகம், யாகம் உள்ளிட்டவைகளில் அதீத நம்பிக்கைக் கொண்டவர். 

 

தமிழக அரசியல்வாதிகளில் மறைந்த ஜெயலலிதாவுக்கு கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணம், ஜாதக கணிப்பு, அவர்கள் செய்யும் யாகம் உள்ளிட்டவைகளில் தான் அதிக நம்பிக்கை. 
 


அந்த வகையில், மகிந்த ராஜபக்சேவுக்கும் கேரள நம்பூதிரிகளின் பிரசண்ணத்தில்தான் நம்பிக்கை அதிகம். அரசியல் ரீதியாக தனக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம் கேரள நம்பூதிரிகளிடம் யோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஜபக்சே. 
 


இலங்கை அரசியலில் இதற்கு முன்பு அவர் பெற்ற பல வெற்றிகளுக்கு கேரள நம்பூதிரிகள் மந்திரித்துக் கொடுத்த மந்திரகோல்தான் காரணமாக இருந்தது என ஆட்சியில் இருந்தபோது பலமுறை தனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார் ராஜபக்சே! 



அதற்கேற்ப முக்கிய இடங்களில் அவர் மந்திரக்கோலுடன் வருவதைக்கண்டு இலங்கை அரசியல் தலைவர்கள் ஆச்சரியப்பட்டதுண்டு. பலருக்கு அந்த மந்திரக்கோல் பீதியை ஏற்படுத்தியதும் உண்டு. 

 

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டும் அவரால் அதிகாரத்தில் அமர முடியவில்லை. அவரது பிரதமர் பதவுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள். அதனால், அவரது பிரதமர் பதவி குறித்தக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரமால் இருக்கிறது. பிரதமர் பதவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பும்  சாதகமாக வராது என்றே அவரிடம் அவரது சட்ட நிபுனர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதனால் மன உளைச்சல்களுக்கு ஆளான ராஜபக்சே, தனது கேரள நம்பூதிரி நண்பர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்புவிற்கு வரவழைத்துள்ளார். கொழும்பு சென்ற நான்கு நம்பூதிரிகள், ராஜபக்சேவுடன் அவரது மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகளும் யாகமும் நடந்தது. அந்த பூஜையின் முடிவில் பல மாந்ரீகங்கள் அடங்கிய மந்திரக்கோல் தயாரிக்கப்பட்டு அதனை ராஜபக்சேவிடம் தந்துள்ளனர். தற்போது அந்த மந்திரக்கோலுடன் வலம் வருகிறார் ராஜபக்சே! அதைக்கண்டு, " மீண்டும் மந்திரக் கோலா?"  என அதிர்ச்சியடைந்துள்ளனர் இலங்கை அரசியல்வாதிகள்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தொடரும் அத்துமீறல்; மீண்டும் 21 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
continuing trespass; 21 fishermen captured again

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அண்மையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை மீண்டும் கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களின் இரண்டு விசைப்படகு களையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.