Skip to main content

ஒரே நேரத்தில், ஒரு லட்சம் பசுக்கள் கொலை!!!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018
cow

 

 

 

நியூசிலாந்தில் பெருகி வரும் நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். பசுக்களுக்கு மைகோபிளாஸ்மா போவிஸ் என்ற நோய் பரவுவதை கண்டறிந்தனர், 2017 ஜூலை மாதத்தில்தான் இது அதிகளவில் நியூசிலாந்தில்தான் பரவுகின்றது என்ற விஷயம் கண்டறியப்பட்டது. மேலும் இந்த நோய் தெற்கு நியூசிலாந்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வடக்கு நோக்கி பரவுவதையும் கண்டறிந்தனர். இதைக்கட்டுப்படுத்துவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்தும் இந்த நோய் தொடர்ந்து பரவிக்கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.  

 

 

இதுபற்றி நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கூறியது, நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள், பால் பொருட்கள். நம் நாட்டில் மொத்தம்  இலட்சம் பசுக்கள் உள்ளன.  மைகோபிளாஸ்மா போவிஸ் என்ற நோய் பரவுவதை தடுப்பதற்காகவும், அந்த நோயை அழிப்பதற்காகவும் ஒரு இலட்சம் பசுக்களை கொல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இவ்வளவு பசுக்களை கொல்ல விருப்பமில்லை என்றாலும் மற்ற பசுக்களை காப்பதற்காக இதை செய்ய வேண்டியது உள்ளது. மக்கள் அரசுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் போராடிய பசுமாட்டைக் காப்பாற்றிய அமைச்சர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
NN

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் வைகை ஆற்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேற்பார்வையில் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதை முன்னிட்டு வைகை ஆறு நீர்வரத்து பாதை, குடகனாறு நீர்வரத்து பாதை பகுதிகளில் ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சி நிர்வாகத்தினர் அவர்களுக்கு முறையான தங்குமிடம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்.

NN

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு சென்று வைகை ஆற்றுப் பாலத்தில் நீர்வரத்து பாதைகளை ஆய்வு செய்தபோது வைகை ஆற்று வெள்ளத்தில் பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உடனடியாக கிராம மக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து உயிருக்கு போரடிக்கொண்டிருந்த பசு மாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார். 

Next Story

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Born in New Zealand is New Year People flooded with happiness

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதனையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.