Skip to main content

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

nobel prize

 

2021 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுவருகின்றன. அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசல்மேன், ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

 

அதேபோல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவுக்கும், அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, தொழிலாளர் பொருளாதாரத்தில் அனுபவ பங்களிப்புக்காக டேவிட் கார்டுக்கும், காரண உறவுகளின் பகுப்பாய்வில் முறையான பங்களிப்பிற்காக ஜோஷ்வா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
World record 4 month baby in andhra pradesh

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தனது குழந்தையின் திறமையை வெளி உலகத்திற்குக் கொண்டு வர நினைத்த ஹேமா, தன் குழந்தை அடையாளம் காணும் பொருட்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோவை நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

குழந்தையின் வீடியோவை கண்ட நோபல் உலக சாதனை குழுவினர், கைவல்யா உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்து குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் மூலம், 4 மாத குழந்தையான கைவல்யா உலக சாதனை படைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சாதனைக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

நோபல் பரிசு பெற்றவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Nobel laureate sentenced to 6 months in prison!

வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது யூனுஸ் (83). பொருளாதார நிபுணரான இவர், ‘ஏழைகளுக்கான வங்கியாளர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இவர் ‘கிராமின் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற வங்கியைத் தொடங்கி லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கியுள்ளார். வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாகக் கொண்டு கிராமின் வங்கி மூலம் வறுமை ஒழிப்பு பிரச்சாரத்தில் மேற்கொண்டமைக்காக இவர் 2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றார். 

இந்த நிலையில், இவர் கிராமின் வங்கியில் தொழிலாளர் சட்டத்தினை மீறியதாகவும், தொழிலாளர் நல நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு நடந்த விசாரணையில், தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று (01-01-24) தீர்ப்பளித்துள்ளது.

அப்போது, முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 25,000 டாகா (வங்காளதேச கரன்சி) அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை பெற்ற 4 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை உடனடியாக விசாரித்த நீதிமன்றம், ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது.