Skip to main content

பல்வேறு மரபணு பிறழ்வுகளுடன் கூடிய புதிய வகை கரோனா திரிபு கண்டுபிடிப்பு!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

corona

 

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை கரோனா பாதிப்பு மீண்டும் ஆட்டிவைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் அண்மைக்காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.

 

இந்தநிலையில் தற்போது அந்தநாட்டில், பல்வேறு மரபணு பிறழ்வுகளைக் கொண்ட புதிய வகை கரோனா திரிபை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தநாட்டின் வைராலஜிஸ்ட் துலியோ டி ஒலிவேரா, துரதிர்ஷ்டவசமாக, தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய கரோனா திரிபை கண்டறிந்துள்ளோம். இது கவலைக்குரியது" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோசமான சாதனையில் யார் முதலிடம்? - போட்டி போட்ட இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Who on top for worst achievment India and South Africa team to compete

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. காயம் காரணமாக பவுமா விளையாடாத நிலையில், எல்கர் அணிக்கு தலைமை தாங்கினார். டாஸ் வென்ற எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் 2 ரன்னிலும், கேப்டன் எல்கர் 4 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஜொர்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பெடிங்காம் 12, வெர்ரெய்ன் 15 தவிர இரட்டை இலக்கத்தை தாண்டாமல் அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் ரோஹித், கில் இணை ஓரளவு நிலைத்து ஆடியது. ரோஹித் 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆக, ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. 153-4 என இருந்த இந்திய அணி 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரே ரன்னுக்கு (153) 6 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த அணி எனும் மோசமான சாதனையைப் படைத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் எல்கர் 12 ரன்களுக்கும், ஜொர்ஸி ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

- வெ.அருண்குமார்

Next Story

SA vs IND : இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்

Published on 19/12/2023 | Edited on 20/12/2023
SA vs IND : South Africans are great to beat India

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சாய் சுதர்சன் 62 ரன்களும், கேப்டன் கே.எல். ராகுல் 56 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 18 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் அரைசதம் அடித்த சாய் சுதர்சன் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்த நிலையில், 2வது போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சார்பில் டோனி டெ சோர்ஸி  ஆட்டமிழக்காமல் 119 ரன்களும், ஹெண்ட்ரிக்ஸ் 52 ரன்களும், வான் டெர் டஸ்ஸென் 36 ரன்களும் குவித்தனர். இறுதியாக 42.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து தென்னாப்பிரிக்கா அணி 215 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.