Skip to main content

ஓய்வு பெற தயாராகும் அலிபாபா நிறுவனர் ஜாக் மா!!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018

 

jack maw

 

அலிபாபா இணைய வணிக நிறுவனதின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் மா ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

 

1999-ஆம் ஆண்டு சீனாவின் ஆங்சூவில் நிறுவப்பட்ட அலிபாபா இணைய வணிக நிறுவனம் தற்போது உலக இணைய வணிக நிறுவனங்களின் பட்டியலில் 5 இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தை பட்டியலிலும் இடம்பிடித்தது அலிபாபா. இன்றய நிலவரப்படி அலிபாபாவின் மொத்த சந்தை மதிப்பு 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். நிறுவனம் வளர வளர அலிபாபா நிறுவனரில் ஒருவரான ஜாக் மாவின் சொத்து மதிப்பும் உயர்ந்தது. சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் கோடிகள் ஆகும். இவர் அலிபாபாவில் இணைவதற்கு முன் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

 

இந்நிலையில் 54 வயதாகும் ஜாக் மா அலிபாபா நிறுனவன பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள் கிழமை அன்று பணி ஓய்வு பெற இருப்பதாக தெரியவருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.