Skip to main content

கடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை! - இங்கிலாந்து இளவரசரின் கதை!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

england prince philip incident his history

 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'சூரியன் மறையாத தேசம்' எனப் பெயர் பெற்ற நாடு இங்கிலாந்து. இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவி வகித்து வருகிறார். இவரது கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப், 99 வயதில் காலமானார். இளவரசர் பிலிப் காலமானதை, பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக நேற்று (09/04/2021) அறிவித்தது.

 

இங்கிலாந்து இளவரசர் பிலிப் குறித்து பார்ப்போம்!
 

கிரேக்க மற்றும் டென்மார்க் அரச குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர் இளவரசர் பிலிப். கிரீஸ் நாட்டின் கோர்பூ தீவில் 1921- ஆம் ஆண்டு பிறந்தார் இளவரசர் பிலிப். தனது 18 ஆவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, 1947- ஆம் ஆண்டு நவம்பர் 20- ஆம் தேதி, எலிசபெத்தை இளவரசர் பிலிப் கரம் பிடித்தார். 1953- ஆம் ஆண்டு பிரிட்டன் மாமன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைந்தார். 1953- ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பட்டம் சூட்டப்பட்டார். அதுமுதல் இளவரசர் பிலிப், 'எடின்பெரோ கோமகன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்- இளவரசர் பிலிப் தம்பதிக்கு சார்லஸ் உட்பட மூன்று மகன்களும், இளவரசி ஆனி என்ற மகளும் உள்ளனர். இளவரசர் வில்லியம் உட்பட 8 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

 

england prince philip incident his history

 

கடந்த 2017- ஆம் ஆண்டு தனது அரச பொறுப்புகளில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். ராணி இரண்டாம் எலிசபெத்தோடு, பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் இளவரசர் பிலிப் வீடு திரும்பினார்.

 

இங்கிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், லண்டன் மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (09/04/2021) காலை இளவரசர் பிலிப் இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 10- ஆம் தேதியுடன் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில், இளவரசர் பிலிப் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்கிலாந்து இளவரசரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.