Skip to main content

ஆட்சியையே அசைத்துப் பார்த்த கரோனா... யார் இந்த ஃபுமியோ கிஷிடா?

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Corona who shook the regime ... who is this Fumio Kishida

 

உலக நாடுகள் அனைத்திலும் சுகாதாரம், தொழில், கல்வி என அனைத்து அம்சங்களையும் சீர்குலைய வைத்த கரோனா ஜப்பானில் ஆட்சியையே அசைத்துப் பார்த்துள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்து வந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகியநிலையில் யோஷிஹிதே சுகா புதிய பிரதமராகப் பதவியேற்றுச் செயல்பட்டு வந்தார். ஆனால் யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தப் பதவியைத் துறக்கும் முடிவை எடுத்தார் யோஷிஹிதே சுகா. இதற்கும் யோஷிஹிதே சுகா கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில்தான் பதவியேற்றிருந்தார். இந்நிலையில் யோஷிஹிதே சுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். 

 

தற்பொழுது புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃபுமியோ கிஷிடா முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். முதல் சுற்றில் சனே ட்காய்சி, சிக்கோ நோடா என்ற இரண்டு பெண் வேட்பாளர்களை எளிதில் தோற்கடித்த ஃபுமியோ கிஷிடாவுக்கு பெரும் சவாலாக இருந்தவர் மற்றொரு வேட்பாளரான தடுப்பூசி அமைச்சரான டேராகோனா. இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் இறுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஃபுமியோ கிஷிடா.

 

ஜப்பான் நாடாளுமன்றத்தில் வரும் 4ஆம் தேதி புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார். உட்கட்சி தேர்தலில் வெற்றி எளிதாகக் கிடைத்திருந்தாலும் கரோனா, பொருளாதார சரிவு, தொழில்கள் நலிவடைவு என பல்வேறு சவால்கள்  கிஷிடா முன்னும் காத்திருக்கின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.