Skip to main content

"அவ உன் பொண்டாட்டி இல்ல.... என் மகள்...!" - மகனுக்கு அதிர்ச்சி கொடுத்த தாய்.!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

china marriage incident

 

தனது சகோதரனையே மணப்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவில் ஜியாங்க்சு பகுதியில் வசிக்கும் மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சில நிமிடங்களில் திருமணம் நடைபெற உள்ளது என்ற சந்தோஷத்தில் மணமகனும், மணமகளும் இருக்க பூகம்பம் வெடித்தது.

 

திருமணத்திற்குத் தயாரான மணமகளைப் பார்த்த, மணமகனின் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பிறப்பில் இருந்தே இருக்கும் தழும்பு ஒன்று, மணமகளின் உடலில் இருக்க அதனைப் பார்த்த மணமகனின் தாய், அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மணமகளின் குடும்பத்தாரிடம் அவரின் உண்மையான தாய், தந்தை குறித்து விசாரித்தார். அப்போதுதான் அந்தத் தகவல் அனைவரையும் திடுக்கிடச் செய்ததது. மணமகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் தத்தெடுத்து தங்களது மகளாக வளர்த்துவந்ததாக அவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

 

அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெண் குழந்தையை மணமகனின் பெற்றோர் தொலைத்துள்ளனர். அந்தப் பெண் தான் இந்த மணமகள் என்பதை அவளது உடலில் இருந்த தழும்பைக் கொண்டு மணமகனின் தாய் கண்டறிந்தார். இந்த தகவலை அறிந்ததும் தன்னை பெற்றெடுத்த நிஜத் தாயைக் கட்டியணைத்துக் கொண்டு மணமகள் அழுதார். இதன் மூலம் மணமகனுக்கு, மணமகள் சகோதரி உறவு முறையாவதால் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

 

அப்பொழுது வேறொரு அதிர்ச்சி தகவலையும் மணமகனின் பெற்றோர் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். அதாவது தங்களது பெண் குழந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து விட்டதால் வேறொரு ஆண் குழந்தையை எடுத்து தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும், அவன் தான் இந்த மணமகன் என்றும் கூறினர். இதனைக் கேட்டதும் உறவுமுறையில் தாங்கள் சகோதரன், சகோதரி இல்லை என்ற ஆனந்தத்தில் மணமகனும், மணமகளும் திளைத்திருக்க இருவருக்கும் நிச்சியம் செய்தபடி திருமணம் நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.