
சீனாவில்முதன்முதலில் ஆரம்பித்துஉலகம் முழுவதும் பரவியகரோனாதொற்று, இன்றுவரைஉலகைஆட்டிப்படைத்துவருகிறது. ஆனாலும், இப்போது பிரிட்டன், கனடாஉள்ளிட்ட நாடுகளில்கரோனாதடுப்பூசிபயன்பாட்டிற்குவந்துள்ளது.
எனவே, கரோனா தொற்றிலிருந்து விரைவில் விடிவுகாலம் பிறக்கும்எனநினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு, அதிர்ச்சியளிப்பது போல், அடுத்த சில மாதங்களுக்கு கரோனாதொற்று மோசமாக இருக்கக் கூடும் எனபில்கேட்ஸ்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "துரதிர்ஷ்டவசமாக, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கரோனாதொற்று மோசமானதாக இருக்கலாம். சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டுநிறுவனம், அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறுகிறது. நாம், முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த இறப்புகளில் பெரும் சதவீதத்தைத் தவிர்க்க முடியும்" எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)