Skip to main content

27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பில்கேட்ஸ் - மெலிண்டா!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

bill gates- melinda

 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இவரும் மெலிண்டாவும் 1987இல் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மெலிண்டா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ராடக்ட் மானேஜராக பணியில் சேர்ந்தார். இதன்தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

 

இதன்பிறகு 27 ஆண்டுகள் நீடித்திருந்த இவர்களது திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பில் கேட்ஸும்  மெலிண்டாவும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். பில்கேட்ஸ்க்கு தற்போது 65 வயதாகிறது. மெலிண்டா கேட்ஸ்க்கு தற்போது 54 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பொது சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வரும் நிலையில், இருவரும் பிரிவது பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனைப் பாதிக்குமா என கேள்வியெழுந்தது.

 

இந்தநிலையில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமை பொறுப்பை வகிப்பார்கள் என அந்த ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசி பணிகளுக்கும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீ இங்க வாழணும்னா பணத்தோடு வா, இல்லனா வராத..” - மனைவியை விரட்டிய தொழிலதிபர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

 famous businessman in Salem has filed for divorce from his wife

 

பிரபல தொழிலதிபர் வீட்டுக்கு வந்த இளம்பெண் ஒருவர், திடீரென வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் இராமச்சந்திரன். இவர் சேலம், நாமக்கல் மற்றும் ஓசூர் பகுதிகளில் துணிக்கடைகளையும் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மகன் கார்த்திக் பாலாஜி. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் கார்த்திக் பாலாஜிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் சுபராகாவிற்கும்  திருமணம் நடைபெற்றுள்ளது. 

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த கார்த்திக் - சுபராகா தம்பதி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், கார்த்திக் பாலாஜிக்கு பிசினஸ் தொடர்பான கடன் பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையில் அடிக்கடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தனது மனைவி சுபராகாவின் வீட்டிலிருந்து 5 கோடி ரூபாய் பணம் வாங்கி வரச்சொல்லி கார்த்திக் பாலாஜி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது அப்பாவுக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அவர்களும் பணப் பிரச்சனையில்தான் இருக்கிறார்கள் என சுபராகா கூறியுள்ளார். ஆனால், சுபராகாவின் பேச்சால் ஆத்திரமடைந்த கார்த்திக் பாலாஜி குடும்பத்தினர், “நீ இங்க  வாழணும்னா பணத்தோடு வா.. இல்லனா வராத” என தடாலடியாக பேசி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தன்னுடைய கணவன் குடும்பத்தினரின் செயலால் மனம் நொறுங்கிய சுபராகா தனது சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே ஃபோன் மூலமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், கார்த்திக் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சுபராகா, கேரளா நீதிமன்றத்திற்குச் சென்று தனது கணவர் விவாகரத்து செய்வதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், அந்த வழக்கு விசாரணை முடியும் வரை தனது கணவர் வீட்டிலேயே தன்னை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை சுபராகாவை அவரின் கணவர் வீட்டிலேயே தங்க அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே கார்த்திக் பாலாஜி வீட்டிற்கு புறப்பட்டு சுபராகா வந்துள்ளார். ஆனால் மருமகள் சுபராகா வந்திருக்கும் தகவல் தெரிந்தும் வீட்டின் கதவைக் கூட திறக்காமல் இருந்துள்ளனர் கார்த்திக் குடும்பத்தினர். கோர்ட்டு அனுமதி தந்தும் வீட்டினுள்ளே அனுமதிக்காததால் தொழிலதிபர் இராமச்சந்திரனின் வீட்டின் வாசலில் அமர்ந்தபடி சுபராகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார், இளம்பெண் சுபராகாவிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்துள்ளனர். பிரபல தொழிலபதிபரின் வீட்டின் எதிரே அவரின் மருமகள் தர்ணாவில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பை நிலவியது.

 

 

Next Story

"எளிமையாக்கப்பட்ட விவாகரத்து சட்டம்" - வழக்கறிஞர் சவிதா விளக்கம்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Advocate Savitha Interview

 

எளிமையாக்கப்பட்ட விவாகரத்து சட்டம் குறித்து  வழக்கறிஞர் சவிதா நம்மிடம் விவரிக்கிறார்.

 

விவாகரத்து பெறுவதற்கு இனி ஆறு மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்கிற உத்தரவு வெளியே இருந்து பார்க்கும்போது நல்லதாகத் தோன்றும். விவாகரத்து வழக்குகளுக்கான காலத்தைக் குறைப்பதற்காகத் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருக்கிறது. குடும்ப நலச் சட்டங்கள் என்பது குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதற்காகத் தான் இருக்கிறது. குடும்ப வன்முறை, பாலியல் பிரச்சனைகள், மனப்பிறழ்வு போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தான் விவாகரத்து கேட்க முடியும் என்று சட்டம் சொல்கிறது. 

 

பாலியல் தேவை என்பதாக மட்டுமல்லாமல், ஆண் பெண்ணுக்குள் ஏற்படும் பரஸ்பர புரிதலே திருமண வாழ்வுக்கான தேவை. இது பலருக்குப் புரிவதில்லை. சேர்ந்து வாழ விரும்புபவர்களை நீதிமன்றம் எப்போதும் பிரிக்காது. சட்டமும் இயற்கை நியதியும் அதுதான். விவாகரத்து கேட்கும்போது பாதிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் கேட்பார்கள். குடும்ப வன்முறை போன்ற பிரச்சனை என்றால் மருத்துவரின் சான்றிதழ் கேட்கப்படும். இது ஒரு உதாரணம். விவாகரத்துக்குப் பிறகான குழந்தை வளர்ப்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால் பெண்களே பெரும்பாலும் குழந்தையை வளர்க்க நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.

 

குழந்தைகளின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தை ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைக்கும். நேரடியாக பாதிக்கப்பட்ட நபர் தான் நீதிமன்றத்தில் விவாகரத்து கோர முடியும். மற்றவர்கள் சப்போர்ட்டாகவும், சாட்சியாகவும் மட்டுமே இருக்க முடியும். விவாகரத்து பெறுவது இப்போது அதிகரித்துள்ளது. அந்தக் காலத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்து இருந்தார்கள். இப்போது அவர்கள் கல்வி பெற்றதால், பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிட்டதால் கணவனின் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலையில் இல்லை. அதனால் அவர்கள் விவாகரத்தை நோக்கி நகர்கின்றனர்.

 

விவாகரத்தை நீதிமன்றங்கள் பொதுவாக ஆதரிப்பதில்லை. கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்கான பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வேறு வழியில்லை எனும்போது தான் விவாகரத்து வழங்கப்படுகிறது. விவாகரத்து பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. குடும்ப அமைப்புகள் சிதையாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பொதுவான நோக்கம்.