Skip to main content

உலகில் மூன்றே மூன்று பேரால் பேசப்படும் மொழி என்ன தெரியுமா?

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

நாம் வாழும் இந்த உலகில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள, தகவல்களைப் பரிமாற மொழி அத்தியாவசியமானதாக இருக்கிறது. இன்றளவில் 7,097 மொழிகள் பேசப்படுவதாக ஒரு தகவல் சொல்கிறது. ஆனால், அவற்றில் பல மொழிகள் அழிவிற்கான விளிம்பில் காத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மூன்றே மூன்று பேரால் மட்டுமே பேசப்பட்டு வரும் மொழி மற்றும் அதைப் பேசி வருபவர்களின் எண்ணங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

 

Language

 

வடக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் மூன்று தலைமுறைக்கு முன்னர்வரை முக்கியமான மொழியாக இருந்தது பதேசி. எழுத்து வடிவமற்ற இந்த மொழி பரவலாக பேசப்பட்டு வந்ததும் கூட. ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த நிலை மாறியது. தோர்வாலி மற்றும் பாஸ்தோ ஆகிய இரண்டு மொழிகளின் ஆதிக்கம் அதிகமான சூழலில், படிப்படியாக பதேசி மொழி அழிவைச் சந்தித்திருக்கிறது. 

 

குல், ரஹீம் குல் மற்றும் அலி ஷேர் ஆகிய மூவருக்கு மட்டுமே தற்போது பதேசி மொழி தெரியுமாம். இவர்கள் மூவரும் தங்களோடு பதேசியும் மரணமடைந்து விடும் என அஞ்சியும், தங்கள் பிள்ளைகளுக்கு இந்த மொழியைக் கற்றுக்கொடுக்க முடியவில்லை என எண்ணியும் வருத்தம் கொள்கின்றனர். மேலும், அதிகப்படியானோர் பேசாத மொழி என்பதால், இவர்களுக்குமே பல வார்த்தைகள் நினைவில் இல்லையாம்.

 

தற்போது அந்த மொழியைக் காப்பது மற்றும் காலகாலத்திற்கும் பயணிக்க வைப்பதற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.