Skip to main content

25 மில்லியன் ஆண்ட்ராய்டு போன்களை தாக்கியுள்ள புதிய வைரஸ்... பயனாளர்களுக்கு எச்சரிக்கை...

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

இன்றைய சூழலில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்டது ஸ்மார்ட்போன்கள். அதில் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்துவது ஆண்ட்ராய்டு போன்கள் தான்.

 

agent smith malware attacked more than 25 million android devices all over the world

 

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் இந்த ஆண்ட்ராய்டு போன்களுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் ”ஏஜெண்ட் ஸ்மித்” என்ற மால்வேர் ஒன்று சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு செயலி போல போனில் குடியேறும் இது, மெல்ல போனில் இருக்கும் மற்ற செயலிகளை பாதிக்கிறது. இந்த வைரஸின் தாக்குதலை பயனாளர்களால் ஆரம்ப காலங்களில் உணர முடியாது என்கிறது இதனை ஆய்வு செய்த நிறுவனம். இந்த மால்வேர் எப்படி வருகிறது, என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பவை குறித்த முழு தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் இணைய சேவையை உபயோகிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தெரியாத இணையதளங்கள், லிங்குகள் ஆகியவற்றிற்குள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் - ஜூன் வரை 4.4 கோடி ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

4.4 crore smartphones exported from April-June!

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 16% அதிகரித்துள்ளது. 

 

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலங்களில் 4 கோடியே 4 லட்சம் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசின் உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகை திட்டமே, உற்பத்தியாளர்கள் அதிகளவு உற்பத்தி செய்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது. 

 

ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு ஸ்மார்ட்போன்கள் உள்நாட்டில் தயாரித்தவை என அந்நிறுவனத்தின்  ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 

Next Story

"நவம்பர் ஒன்று முதல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது" - நிறுவனம் அறிவிப்பு!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

whatsapp

 

பிரபலமான தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், படிப்படியாக பழைய மொபைல் ஃபோன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்திவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 4.0.3 அல்லது அதைவிட குறைவான இயங்குதளம் கொண்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அதேபோல், 9 அல்லது அதற்கு குறைவான ஐ.ஓ.எஸ்களைக் கொண்ட ஆப்பிள் ஐ-போன்களிலும் நவம்பர் ஒன்று முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஐ-போன் எஸ்.இ., ஐ-போன் 6 எஸ், ஐ-போன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றில் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது.

 

பயனர்களால் தங்களது மொபைல் ஃபோனின் இயங்குதளத்தை (operating system) அப்கிரேட் செய்ய முடிந்தால், அவர்களால் வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.