Skip to main content

சிறுவனைக் கடத்திய இளைஞர்! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The youth who kidnapped the boy! Shocking information at trial!

 

விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகே உள்ள மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (20). இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவருகிறார். இவர், நேற்று முன்தினம் (04.12.2021) அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது ஐந்து வயது மகனை தின்பண்டம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருக்கனூர் டவுனுக்குத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு 7 மணியளவில் உதயன் மட்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது பாட்டியிடம், ‘மண்ணாடிப்பட்டு - திருக்கனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் தானும் அன்பழகன் மகன் ஐந்து வயது சிறுவனும் வந்துகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து என்னைத் தாக்கிவிட்டு சிறுவனை கடத்திச் சென்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாக கூறிவிட்டு சென்றார்கள்’ எனக் கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறுவனின் தந்தை அன்பழகனிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக திருக்கனூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் திருக்கனூர் பகுதியைச் சுற்றிலும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீசாருடன் மாணவர் உதயன் கூடவே சென்று தன்னைத் தாக்கிவிட்டு சிறுவனைக் கடத்திச் சென்ற இடம் இது என்று அடையாளம் காட்டியதோடு, அவர்களுடன் சேர்ந்து உதயனும் சிறுவனைத் தேடியுள்ளார். 

 

இதற்கிடையே, போலீசார் உதயன் பயன்படுத்திவந்த செல்ஃபோனை பறிமுதல் செய்து அந்த ஃபோனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வுசெய்தனர். அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து போலீசார் பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் தனது பெயர் பழனியம்மாள் என்றும், தனது வீட்டில் ஒரு சிறுவனைப் கொண்டுவந்து விட்டுவிட்டு பிறகு வந்து அழைத்துச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற உதயன் இன்னும் வந்து சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என்பதற்காக ஃபோன் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். 

 

அவரிடம் விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட போலீசார், நேரடியாக அந்த வீட்டுக்குச் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும், உதயன் சிறுவனைக் கடத்திவிட்டு, மர்ம நபர்கள் என்று நாடகமாடியுள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

 

இதுகுறித்து உதயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய செல்ஃபோன் வாங்கப் விரும்பியதாகவும், அதற்குப் பணம் கிடைக்காததால் சிறுவனைக் கொண்டுபோய் ஒரு வீட்டில் விட்டுவிட்டு, பணம் கேட்டு கடத்தல் நாடகம் நடத்தி அதன் மூலம் வரும் பணத்தில் செல்ஃபோன் வாங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்தில் சிறுவனைக் கடத்தியதாக கல்லூரி மாணவர் உதயன் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.