Skip to main content

தவறான வாழ்க்கை! கொலையான உயிர்கள்! -பாட்டி உட்பட உறவினர்கள் கைது

Published on 23/08/2018 | Edited on 23/08/2018

தன் பேரன் கடற்கரைப் பாண்டியைக் கொன்ற வழக்கில் கைதாகியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கனகமணி. இந்த வயதில், கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? ஏடாகூட சமாச்சாரங்களே கொலைக்கான பின்னணியாக உள்ளது. 

murder

 

 

 

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருடைய மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தான். சரோஜாவின் தங்கையும், கடற்கரைப்பாண்டியின் சித்தியுமான பிரியா அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்தாள். ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் பிரியா மீது மூன்று வழக்குகள் உள்ளன. சித்தி பிரியாவின் தகாத நடவடிக்கையைக் கண்டித்த  கடற்கரைப்பாண்டி, தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தான். இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி பிரியா தூக்கில் தொங்க, தற்கொலைதான் என்று கருதிய குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.  

 

ஒருநாள் கடற்கரைப்பாண்டி போதையில் தன் அம்மா சரோஜாவிடம்  “சித்தியை நான்தான் கொன்று தூக்கில் தொங்கவிட்டேன்.” என்று உளறியிருக்கிறான். இந்த விஷயம், இறந்துபோன பிரியாவின் மகள் வின்சிலாவுக்குத் தெரிந்துவிட, பாட்டி சரோஜாவிடம் “உன் மகனை நீயே விஷம் வைத்துக் கொன்றுவிடு.” என்று நச்சரித்திருக்கிறாள். தன் மகனைக் கொல்வதற்கு  சரோஜா சம்மதிக்கவில்லை. 

 

 The relatives including grandmother arrested

 

 


கெட்டவளானாலும் பெற்றவளாயிற்றே! வின்சிலாவுக்கு ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே போனது. தன் தாய் மாமா செல்வத்தின் உதவியுடன் கடற்கரைப் பாண்டியைக் கொலை செய்வதற்கு ஆயத்தமானாள். இந்தத் திட்டத்துக்கு,  பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணியும் உடன்பட்டிருக்கின்றனர். துணைக்கு இன்னொரு ஆணும் இருந்தால் கொலையைக் கச்சிதமாகப் பண்ணிவிடலாம் என்ற நோக்கத்தோடு, பெரியம்மா செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பனையும் தயார்ப்படுத்திவிட்டு,  கொலை செய்வதற்கு நாள் குறித்தனர். இறந்த பிரியாவுக்கு 30-ஆம் நாள் விசேஷம் வைத்தனர். கடற்கரைப்பாண்டியும் வந்து கலந்துகொண்டான். அன்றிரவு, சரோஜாவுடன் மற்ற பெண்களும், பாட்டி கனகமணியின் வீட்டுக்கு தூங்கச் சென்றனர். இந்த நேரத்தில், செல்வமும் மாரியப்பனும் கடற்கரைப்பாண்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, வின்சிலாவின் டூ வீலரில் பிணத்தை எடுத்துச்சென்று, பக்கத்தில் உள்ள புதிய தாதிக்கண்மாயில் வீசிவிட்டு திரும்பினர். 

 


விடிந்ததும் மகன் கடற்கரைப்பாண்டியைத் தேடினார் சரோஜா. கண்மாயில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்துக் கதறினார். ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் தந்தார். போலீசார் விசாரித்தபோது, பிரியாவின் விசேஷத்துக்கு சம்பந்தமே இல்லாமல் செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பன் வந்தது உறுத்தியிருக்கிறது. விசாரணையில் கடுமை காட்டியவுடன், திட்டம் தீட்டியதையும் கொலை செய்ததையும் ஒத்துக்கொண்ட மாரியப்பன், அனைவரையும் காட்டிக்கொடுத்தான். பிறகு, 'நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் கடற்கரைப்பாண்டியைத் தீர்த்துக்கட்டினோம்’ என்று கனகமணி உள்ளிட்ட உறவினர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 

 

 

ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டுதல், சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், கொலையான கடற்கரைப்பாண்டியின் பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணி, அக்கா வின்சிலா, தாய்மாமன் செல்வம் மற்றும் பெரியம்மாவின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

 

 

வழி தவறிய வாழ்க்கையால், பிரியாவும், கடற்கரைப்பாண்டியும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உறவினர்களோ, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.