Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

World Ozone Day Awareness at Annamalai University!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இயங்கும் சுற்றுச்சூழல் தகவல் மையம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து உலக ஓசோன் விழிப்புணர்வு தினம் மற்றும் சர்வதேச கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் தின விழா உயராய்வு மையத்தில் இன்று (18/09/2021) நடைபெற்றது.

 

பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் புல முதல்வர் முனைவர் சீனிவாசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதின் அவசியம் ஆகியவற்றை எடுத்துக்கூறி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர், மாணவர்கள் கடற்கரையில் பகுதியில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதின் நோக்கம் குறித்த பிரசுரத்தை வெளியிட்டார்.

World Ozone Day Awareness at Annamalai University!

 

விழாவின் சிறப்பு விருந்தினர் இணை பேராசிரியர் ஜான் அடைக்கலம் ஓசோன் படலத்தின் அவசியத்தையும் அதனைப் பாதுகாக்க மாணவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து உதவி பேராசிரியர் குமரேசன், குளோரோஃப்ளோரோ கார்பன் குறித்து எடுத்துக் கூற, அனைவரும் ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக, பேராசிரியர் அனந்தராமன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பேராசிரியர் சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

 

இதனைதொடர்ந்து, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மையமும் இணைந்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்தனர். ஓசோன் தினத்தை நினைவூட்டும் வகையில் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பூஜ்ஜியம் வடிவில் நின்று சுற்றுச்சூழல் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் இணை பேராசிரியர் ராமநாதன், சுற்றுச்சூழல் தகவல் மைய ஊழியர்கள் முனைவர் லெனின், விஜயலட்சுமி, செந்தில்குமார், சுப்பிரமணியன் நாகராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரம் தொகுதியில் ஆள் கிடைக்காததால் வேலூரில் இருந்து வேட்பாளரை இறக்கிய பாஜக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP dropped candidate from Vellore due to lack of candidates in Chidambaram constituency

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி போட்டியிடுகிறார்.  அதே போல் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் சரியான ஆள் இல்லாததால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதபடுத்தி வந்தனர். சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பட்டியல் சமூகத்தில் சரியான ஆள் இல்லை என, வேலூரில் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினியை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.  இது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர். தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர்.

பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவ பொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும்,  உருவ பொம்மையை கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜகவில் சேர்ந்தார்.

பாஜகவுக்கு உள்ளூரில் ஒரு பட்டியலின வேட்பாளர் கிடைக்கவில்லை என   பாஜக தலைவர் அண்ணாமலையின் சிபாரிசால் வேலூர் தொகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில் சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய கடலூர். அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக பாடுபட்ட எவ்வளவோ உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் தமிழக பாஜக தலைமை ஏதோ கணக்கு போட்டு  அறிவித்துள்ளது.  இருப்பினும் தலைமையின் கணக்கு இங்கு செல்லாது என  கட்சியினர் மத்தியில் அரச புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்.