Skip to main content

“உழைப்பால், முயற்சியால் வெற்றிபெற முடியாது!” -ரஜினி; வெளிப்படையா? விரக்தியா?

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

கடந்த மார்ச் மாதம், சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையைத் திறந்து வைத்தார் ரஜினிகாந்த்.

 

rajini

 

 

 

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக்கட்சியின் தலைவரும் ஆவார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும் அவருடைய அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் சொல்லி வருபவர். அவருக்கு  இங்கிலாந்து-ஸ்காட்லாந்து-கிளாஸ்கோவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் பிசிசியன்ஸ் & சர்ஜன்ஸ் அமைப்பு டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது. சிறப்புமிக்க இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியராக இருக்கிறார் ஏ.சி.சண்முகம். ஏழைகளுக்குத் தேவையான மருத்துவ சேவை வழங்கி வருவதற்கான அங்கீகாரம் இதுவென்று ஏ.சி.சண்முகம் தலைவராக உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி குழும நிறுவனங்கள் பெருமிதத்துடன் சொல்கின்றன. 

 

​​​​​​​​rajini

 

 

 

இங்கிலாந்தின் மதிப்புக்குரிய ‘பெலோஷிப்’ விருது பெற்ற ஏ.சி.சண்முகத்துக்கு, இன்று சென்னை-தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. நண்பரின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் “எல்லாருடைய இதயத்துலயும், மனசுலயும், எல்லா ஜீவன்கிட்டயும் அந்த ஆண்டவன் இருக்கிறான். ஏழைகளுக்கு உதவி செய்யறது, அதுதான் முக்கியம்.  அதைச் செய்தாலே,  ஆண்டவனுக்கு செய்த புண்ணியம். இங்கே இருக்கிறவங்கல்லாம் உழைப்பாளி.   நல்லா உழைச்சு முன்னேறிடலாம்னா, முன்னேறிட முடியாது. நல்லா உழைச்சவங்க எல்லாரும் வெற்றி பெற முடியாது. எல்லாருமே நல்லா வெற்றியடையணும், நல்லா சக்சஸ்ஃபுல்லா ஆகணும், நிறைய பணம் சம்பாதிக்கணும்னுதான் எல்லாரும் கஷ்டப்படறாங்க. எல்லாரும் அதை அடைய மாட்டாங்க. வெறும் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டும் இல்ல. ஆண்டவனுடைய அருள், அது இருக்கணும். நம்முடைய, நல்ல ஒரு எண்ணம் இருக்கணும். அது இருந்தால்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்.” என்று மனம் திறந்து பேசினார்.  

 

ரஜினியின் இந்தப் பேச்சை ஒரேயடியாக விரக்தி என்று சொல்லிவிட முடியாது. எந்த இடத்தில் பேசினாலும், அவர் ஆண்டவனைக் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனாலும், லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா போன்ற சினிமாக்களின் மூலம், வர்த்தகரீதியாக தனக்கு கிடைத்த அனுபவமோ என்னவோ, தனி மனிதனின் வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் இத்தனை வெளிப்படையாக அவரைப் பேச வைத்திருக்கிறது. இது போதாதா?  ‘ரஜினியின் பக்குவம் யாருக்கு வரும்?’ என்று. சந்தடி சாக்கில் ‘உச்’ கொட்டுகிறது திரைஉலகம்!

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.