Skip to main content

மகளிர் தினம்; ஆறாயிரம் கி.மீ. பைக் பயணம்! அசத்தும் ராணுவ வீராங்கனைகள்! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

உலக மகளிர் தினத்தையொட்டி டெல்லி இந்தியா கேட் முதல் கன்னியாகுமரி வரை எல்லை பாதுகாப்பு துணை ராணுவப் படை மற்றும் சாகச வீராங்கனைகள் 38 பேர் உள்ளிட்ட 50 பேர் இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.


மார்ச் 8ஆம் தேதி டெல்லி இந்தியா கேட்டில் தொடங்கிய சாகச வீராங்கனைகளின் பயணம், ஒவ்வொரு மாநிலங்கள் வழியாக கடந்து, தற்போது தமிழ்நாட்டில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று கரூர் வருகை தந்த ராணுவ வீரர்கள் மற்றும் சாகச வீராங்கனைகள் திருக்காம்புலியூர் ரவுண்டானா, பேருந்து நிலையம் ரவுண்டானா, திண்ணனார் ஜவகர் பஜார் வழியாக திருவள்ளூர் விளையாட்டு மைதானத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களுக்கு வழி நெடுகிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த  துணை இராணுவ வீராங்கனைகளுக்கு ரோஜா மலர்கள் கொடுத்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஏ.டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் முப்படை வீரர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

மொபைல் முழுக்க ஆபாசப் படம்; ராணுவ வீரர் கைது

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Soldier arrested in thiruchy

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.