Skip to main content

அரசுப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

 

women incident youth arrested police dharmapuri district

 

தர்மபுரி அருகே அரசுப்பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை நடத்தி வரும் உணவகத்தில் பிரபு (வயது 25) என்ற வாலிபர் 6 மாதம் வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென்று வேலையை விட்டு நின்றுவிட்டார். 

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மாணவியின் தாய் கர்ப்பப்பைச் சிகிச்சைக்காக கோபிநாதம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவி கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரபு அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் அழைத்துள்ளார். அதற்கு வர மறுத்த மாணவி, வீட்டிற்குள் சென்றுள்ளார். 

 

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரபு, மாணவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அமர வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். 

 

இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் மாணவியும் மறைத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய வயிறு பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. இதனால்  சந்தேகம் அடைந்த பெற்றோர், சில நாள்களுக்கு முன்பு அவரிடம்  விசாரித்துள்ளனர். 

 

அப்போதுதான் அந்த மாணவி, பிரபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். 

 

மேலும், இதுகுறித்து அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆய்வாளர் லதா, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) அவரைக் கைது செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.