Skip to main content

கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!!

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

elephant

 

நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனங்கள் அதிகமாக கொண்டது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 

 

பெரும்பாலும் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. இந்நிலையில் காடுகளில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வருவதும் இப்பகுதிகளில் வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில் வன விலங்குகள் மனிதர்களையும் தாக்குவதோடு, விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.  இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் இருந்து வந்த காட்டு யானைகள் தற்போது நகர் புறங்களிலும் உலா வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுவது வாடிக்கையாகவே உள்ளது.

 

 

இன்று அதிகாலை கூடலூர் பகுதியை அடுத்த ஓவேலி கிராமத்தை சேர்ந்த  சரோஜினி என்ற பெண்மனி சீப்புரம் பேருந்து நிலைத்தியத்திற்கு செல்லும் போழுது, எதிர்பாராத விதமாக சுருளிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை எதிரே வந்துள்ளது. அப்போது காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியுள்ளார். ஆனால் யானை விடாமல் துரத்தி அப்பெண்மனியை தாக்கியுள்ளது. அவரின் அலறல்  சத்தத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் சத்தம்போட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

 

 

பின்னர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த சரோஜினியை உதகை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த கூடலூர் வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஒவேலி பகுதயில் காட்டு யானைகள் அதிக அளவில்  நடமாடுவதல் வன துறையினர் அவற்றை வனத்திற்குள் விட்டுமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.