Skip to main content

மணல் கொள்ளையை தடுத்த பெண் வி.ஏ.ஓ;கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது !

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

கடந்த மாதத்தில் திருச்சி மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஓவர் லோடு மணல் லாரியை தடுத்த ஆர்.ஐ. ஆளும்கட்சி பிரமுகர் கொலைவெறி தாக்குதல் நடந்தி கொலைமிரட்டல் விடுத்ததும் உயிருக்கு பயந்து போலில் புகார் செய்தும் அமைச்சர் வளர்மதியின் சிபாரிசில் கடைசி வரை கைதிலிருந்து தப்பித்து கடைசியில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். 

இதை தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையத்தில் மணல் கொள்ளை தடுத்த பெண் வி.ஏ.ஓவை தாக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

 

 

SAND

 

 

 

தொட்டியம் அருகே உள்ள பெரியபள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விமலாதேவி. இவர் பெரியபள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டும், மணல் திருட்டு குறித்து அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தற்போது காவிரியில் தண்ணீர் பெருவெள்ளமாக ஓடி முடிந்த நிலையில் கிளை ஆறுகளில் தண்ணீர் இல்லாதாதால் மீண்டும் மணல் கொள்ளை ஆரம்பித்துள்ளனர். 
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியபள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் திருடிசெல்வதற்காக சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ரோந்து பணியில் கண்டுபிடித்த விமலாதேவி அனைத்து மூட்டைகளையும் கத்தியால் கிழித்து மணலை மூட்டைகளில் திருடி செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 
 

இந்நிலையில் பெரியபள்ளிபாளையத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் மகன் அரவிந்த் என்ற வாலிபர் விஏஓ விமலாதேவியிடம் ஆற்றில் மணல் எடுப்பதை எப்படி தடுக்கலாம் எனக்கூறி கோபமாக அவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தாக்க வந்தலில் தப்பித்த விஏஓ விமலாதேவி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
 

இதன் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் மணல் கொள்ளைக்கு பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் விமலாதேவி போன்று நேர்மையான அதிகாரிகளை மணல் கொள்ளையர்கள் மிரட்டுவது வாடிக்கையாக கொண்டே இருக்கிறது.   

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.