Skip to main content

கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி எடுத்த விபரீத முடிவு... மூன்று உயிர்கள் பறிபோன சோகம்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Husband's drinking .. Suspicion .. Woman passes away by jumping into well with children!

 

குடிப்பழக்கமும் மனைவி மீதான சந்தேகமும் ஒரு குடும்பத்தில் 3 உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றன. 


விருதுநகர் – தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் 11 ஆண்டுகளுக்கு முன், தனது உறவுக்காரப் பெண்ணான லட்சுமி பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு தர்ஷினி பிரியா (வயது 9), சிவசண்முகவேல் (வயது 5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

விடமுடியாத மதுப்பழக்கத்தால், மனைவி லட்சுமிபிரியா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வது, சிவகுமாருக்கு வாடிக்கையாகிப்போனது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பல தடவை சிவகுமாரிடம் ‘நான் செத்துருவேன்..’ என்று லட்சுமி பிரியா கூறிவந்துள்ளார். 

 

இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி பிரியா யாருடனோ செல்ஃபோனில் பேசியதைப் பார்த்து சந்தேகம்கொண்ட சிவகுமார், பிரச்சனை செய்திருக்கிறார். ஏற்கனவே நொந்துபோயிருந்த லட்சுமிபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு பாழடைந்த கிணற்றுக்குச் சென்றுள்ளார். இரு குழந்தைகளையும் தன் உடலுடன் சேர்த்து சேலையால் கட்டிக்கொண்டு, பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். மூவரும் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள்.

 

மூன்று உடல்களையும் விருதுநகர் தீயணைப்பு படையினர் மீட்ட நிலையில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.