Skip to main content

தவறான அறுவை சிகிச்சைகளுக்கு யார் பொறுப்பு? சுகாதார அமைச்சரின் மாவட்ட மக்கள் அதிர்ச்சி

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
doctor

  

 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தான் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலிதாவால் நிதி ஒதுக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஆனால் சொந்த மாவட்டத்தில் இப்படி தொடரும் பிரச்சனைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு போகிறதா என்பது தான் கேள்விக்குறி. 

 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு படுக்கையில் இருந்த பெண்ணிடம் எந்த ஊர்? எதற்காக வந்தார்கள் நல்லா கவனிக்கிறார்களா என்று கேட்டார். ’’அய்யா நான் உங்க தொகுதி தான். காய்ச்சல்னு வந்தேன் காலையில வந்தது. இன்னும் எந்த வைத்தியமும் செய்யல இந்த பெட்டுல இருக்கிறேன்’’ என்று பதில் சொன்னார். கூட இருந்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நிர்வாகத்தை கடிந்து கொண்டார். 


    அதன் பிறகும் இப்படி பல பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் எல்லாம் அமைச்சர் கவனத்திற்கு சென்றால் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று சொல்லும் மருத்துவமனை வட்டாரத்தில் அமைச்சர் கவனத்திற்கு போகாமல் தடுத்துவிட்டு அமைச்சர் வரும் போது பொன்னாடை அணிவித்து மனம் குளிரச் செய்து அனுப்பிவிடுகிறார்கள். அதனால் அவரும் கண்டுக்கல. அதன் விளைவு தான் இப்ப 2 பெண்களுக்கு தவறான அறுவைச் சிகிச்சை வரை வந்துவிட்டது என்றனர்.

 

    தவரான அறுவை சிகிச்சையா? என்ற நமது கேள்விக்கு..  ஆமா வார்டு நம்பர் 502 ல போய் பாருங்க என்றனர். 
    ஆலங்குடி அருகில் உள்ள செம்பட்டிவிடுதி முத்தையா மனைவி மகேஷ்வரிக்கு 6 மாதம் முன்னால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட பிறகு வலியால் அவதிப்பட்டது ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து சலம் வந்து கொண்டே இருக்க தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது தான் தெரிந்திருக்கிறது பிரசவ அறுவை சிகிச்சையின் போது ரத்தம் துடைத்த பஞ்சை வயிற்றில் வைத்து தைதுவிட்டதால் சலம்பிடித்து வெளி வந்தது தெரியவந்தது. இப்ப மறுபடி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சு அகற்றப்பட்டு பெட்ல இருக்கிறார்.

 

    அடுத்த பெட்ல கிடக்கிற ஆதனக்கோட்டை பக்கம் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சுப்பிரமணியன் மகள் திவ்யபாரதிக்கு நெஞ்சுல கட்டி இருக்குன்னு 24 ந் தேதி அட்மிஷன் ஆனார். 30 ந் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. நினைவு திரும்பிய திவ்யபாரதி நான் நெஞ்சுக்கு மேல கட்டி இருக்குன்னு சொன்னேன். ஆனா நெஞ்சுக்கு கீழே அறுத்திருக்கே என்று வார்டுக்கு வந்த பெண் மருத்துவரிடம் சொல்ல அந்த பெண் மருத்துவரும் திவ்யா சொன்ன இடத்தில் கை வைத்து பார்த்துவிட்டு ஆமா மாற்றி அறுத்துட்டாங்க. மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை செஞ்சால் சரியாகிடும் என்று சொல்ல பயத்தில் நடுங்கி போய் இருக்கிறார் திவ்யா. 


    நாம் இந்த தகவல்களை வெளியே கொண்டு வந்த சிறிது நேரத்தில் அங்கு கூடிய மருத்துவர்கள் குழு மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு சுத்தம் செய்யாமல் தையல் போட்டதால் சீல் வந்தது. இப்ப மறுபடி அறுவை சிகிச்சை செய்து சுத்தம் செய்தாகிவிட்டது. திவ்யபாரதிக்கு மேலே உள்ள கட்டியை அகற்ற தான் கீழே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதை அறியாமல் தவறான சிகிச்சை என்று சொல்லிவிட்டார்கள் என்றனர். 

 

    எது எப்படியோ.. ஆனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் கவனித்தால் சரி தான். சொந்த மாவட்டத்தை அமைச்சர் கவனிக்கவில்லையே என்ற பொதுமக்களின் ஆதங்கம் குறையும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.