Skip to main content

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் இந்த பரிதாபநிலைக்கு யார்தான் காரணம்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா 867.00 லட்சத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

ஆனா தற்போது ஆசியாவிலேயே 25 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே செயல்பட்டு வருகின்றது. பூங்காவில் நூற்றுக்கணக்கான வகை வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் பூங்காவில் ஆங்காங்கே தகவல் பலகைகளில் இடம்பெற்றுள்ளன.

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

வண்ணத்துப்பூச்சி பூங்கா குறித்த பெயர் மற்றும் வகைகள் தகவல் பலகைகளில் உள்ளன ஆனால் வண்ணத்துப்பூச்சி வகை புகைப்படம் வேறாகவும் பெயர் வேறாகவும் இடம்பெற்றுள்ளது . இதனால் வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல்கள் பார்வையாளர்களிடம் கல்வி மாணவர்களிடமும் தவறாக எடுத்துக் கொள்ளப்படும் சரியான தகவல் பலகை வைக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

வண்ணத்து பூச்சி பூங்காவிற்கு தினசரி 200 பார்வையாளர்கள் வந்து செல்கின்றார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 1000 முதல் 2000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றார்கள். வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு என தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில்தான் போக்குவரத்து வசதி ஏற்படு செய்தனர். மேலூர் வரை தற்போது பேருந்து இயக்கம் இருக்கின்றது. தற்போது சிற்றுந்து மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வருகின்றது.

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ கேமராவிற்கு 1000 புகைப்பட கேமராவிற்கு 500 வசூலிக்கப்படுகிறது. DSLR அல்லாத கேமராவிற்கு 200 வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணம் பார்வையாளர்களுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது தற்போது பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

செயல்படாத உள்ளரங்கம்

ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துபூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட உள்ளரங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீன தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. உள்ளரங்கில் வண்ணத்து பூச்சிக்காக உணவு தாவரங்களும் மலர் தாவரங்களும் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளரங்கு செயல்படாமல் உள்ளது. உள்ளரங்கு நோக்கமானது பொதுவெளியில் வண்ணத்துப் பூச்சியினை கண்டுகளிப்பது உள்ளங்கையிலேயே அனைத்து வகையான வண்ணத்துப் பூச்சிகளையும் கண்டுகளிக்க வடிவமைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்துள்ள காரணத்தினால் உள்ளரங்கில் பார்வையாளர்கள் சென்று ஒரே நேரத்தில் வண்ணத்து பூச்சி பூங்காவை பார்வையிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


இயக்கப்படாத பேட்டரி கார் ?

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

25 ஏக்கரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பெரியவர்கள் சுற்றி வரும் வகையில் பேட்டரி கார் விடுவதற்கு திட்டம் இருந்தது. ஆனால் நிதி பற்றாக்குறையினால் திட்டம் கிடப்பில் இருக்கிறது. இதனால் குடும்பத்துடன் வரும் பெரியோர்கள் சரியாக வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றிப் பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். விரைவில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்

நிதி நெருக்கடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா !

தற்போது வாரம் இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகிறது. மின்சாரக்கட்டணம் மாதம் பல லட்சம் வருவதாகவும் கூறுகிறார்கள். இதனால் பெரும் நிதி நெருக்கடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா இருப்பதால் நுழைவு கட்டணம் முதல் வாகன கட்டணம் வரை உயர்த்தப்பட உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

நீர் பற்றாக் குறையினால் பட்டுப்போகும் மரங்கள்

பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் தாவரங்களான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்றவையும் பல்வேறு வகையான மலர்ச்செடிகளும் குறுமரங்கள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும் அது தவிர ஏராளமான மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தற்போது 298 வகையான தாவரங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் வறட்சியினால் ஆறுகள் வறண்டு கிடக்கும் நிலையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆழ்குழாய் கிணறு மூலமாக நீரை எடுத்து பயன்படுத்திவருகிறார்கள். பொதுவாக நீர் இருக்கும் இடங்களில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாக இருக்கும் தற்போது உணவுத் தாவரங்கள் நீர் பற்றாக் குறையினால் பட்டுப்போய் வருவதால் உணவுத் தாவரங்கள் அழியும் சூழல் ஏற்பட்டு வருகிறது.


 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

பூங்காவில் 38 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆரம்ப நிலையில் இடம் பெற்று இருந்தன. தற்போது 103 வண்ணத்துப் பூச்சி வகைகள் பூங்காவில் வாழ்வதாக குறிப்புகள் சொல்லக் கூடிய நிலையில் பூங்காவை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். 298 வகையான தாவரங்கள் 103 பூச்சி வகைகள் 20 வகை பறவை இனங்கள் இங்கு உள்ளது. ஆசியாவிலேயே திருச்சியை திரும்பிப் பார்க்கும் வகையில் வைத்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னங்களில் ஒன்றாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சி வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி கூட இங்க இல்லை என்பதுதான் அதிர்ச்சியான விசயம்.
வண்ணத்துபூச்சிக்கு என்று ஸ்பெஷலாக அமைக்கப்பட்ட இந்த பூங்காவிற்கு 25 ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் 10 ஏக்கர் சும்மாதான் கிடக்கிறது. திறமையில்லாத நிர்வாகம் என்கிற ஒரே காரணத்திற்காக ஆசியாவிலே மிகப்பெரிய வண்ணத்துபூச்சி பூங்காவின் இன்றைய நிலை பரிதாபநிலையில் உள்ளது.

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

இந்தநிலையில் புதுக்கோட்டைக்கு ஒரு மீடிங்கிற்கு வந்த வனத்துறை முதன்மை செயலாளர் தீடீர் என ஸ்ரீரங்கம் வண்ணத்துபூச்சி பூங்காவிற்கு விசிட் செய்து இதை மேம்படுத்துவதற்கு 78 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி ராஜ கோபுரமும் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பேணி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

இந்த நிதியை சரியாக பயன்படுத்தி இந்த பூங்காவின் தரத்தை உயர்த்துவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.