Skip to main content

என்ன இருந்தாலும் எங்க மண்ணின் மைந்தரின் பிள்ளை! - ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த திருவாரூர், திருக்குவளை மக்கள்!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
styalin


கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கிருந்த வருகை குறிப்பேட்டில் கையொப்பம் இட்டுசென்றது அந்தபகுதி மக்களை நெகிழ்சியடைய செய்திருக்கிறது.

கலைஞர் மறைவுக்குப் பிறகு செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுவரும் ஸ்டாலின், தலைவாரன முதல்பயணமாக திருவாரூர் வந்திருந்தார். காலை திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தவர். தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு வந்தார். போகிற வழி நெடுகிலும் கண்ணில் பட்ட மக்களுக்கு கைக்கூப்பி வணங்கியபடியே சென்றார் ஸ்டாலின்.

திருக்குவளைக்கு செல்வதற்கு முன்னாள் எட்டுக்குடி, ஆலங்குடி பகுதிகளில் உள்ள வயற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த அப்பகுதி மக்களை கண்டதும் ஆனந்த பூரிப்புடன் காரில் இருந்து இறங்கி நலம் விசாரித்தார். வந்திருப்பது கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் என்பது தெரிந்து அங்கும் இங்கும் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் ஓடோடி வந்து கைகூப்பி வணங்கி மகிழ்ந்தனர்.
 

stalin


திருக்குவளையில் உள்ள கலைஞரின் வீட்டிற்கு செல்லும் தெரு முனையிலேயே இறங்கி நடந்து சென்றார், அவருக்கு அக்கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த அவரது குலதெய்வம் கோயிலில் மேளம் நாதஸ்வரம் முழங்கின, அவர்களை பார்த்து கும்பிட்டப்படியே சென்றார், அந்த வழியில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக் கூறினர்.

பிறகு வீட்டிற்கு சென்றவர். அங்கிருந்த கலைஞரின் தாயர் அஞ்சுகத்தம்மாள், கலைஞர், முத்துவேலர் உள்ளிட்ட படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். கலைஞரின் திரு உறுவப்படத்தின் அருகில் இருந்த வருகைப்பதிவேட்டில் ’’தலைவரின் பிறந்த ஊரான திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவருடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திமுக தலைவராக வந்துள்ளேன். கழகத்தின் தலைவன் ஆனாலும் கூட தலைவர் கருணாநிதியின் தொண்டனாகவே அவரின் வழிபற்றியே என்னுடைய பயணம் தொடரும்’’ என்று எழுதி கையொப்பம் இட்டார்.
 

stalin


அங்கு 30 நிமிடங்கள் கட்சிக்காரர்கள், உறவினர்களோடு பேசியவர். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் அருகில் உள்ள காட்டூருக்கு சென்றார், அங்கு இருக்கும் கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு தெற்கு வீதியில் சன்னதி தெருவில் உள்ள அவரது அத்தையார் வீட்டிற்கு சென்றார். அங்கு மதிய உணவுவை முடித்துக்கொண்டு, மீண்டும் மன்னார்குடி வழியாக திருச்சிக்கு சென்றுள்ளார்.

ஸ்டாலின் கலைஞரோடும், தனியாகவும், கலைஞர் இறந்த பிறகு ஒரு முறையும் வந்திருக்கிறார், அப்போதெல்லாம் இல்லத மக்கள் ஆதரவு தலைவரானதும் கூடிவிட்டதை கண்ட மாற்றுக்கட்சியினர் என்னதான் இருந்தாலும் அவர் கலைஞரின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார் என புலம்பியபடியே மலைத்து போய் நின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.