Skip to main content

கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் தேவையென்ன? -ஆய்வு நடத்தும் அறநிலையத்துறை அமைச்சர்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

What is the need of the devotees going to the temple? -The Minister of Charities conducting the study!

 

கோவில்களின் அழகு மற்றும் சிலைகள், பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.  உலகிலுள்ள பெரும்பாலான பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்கள் உள்ளன. அவை, தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டிடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக உள்ளன. அக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார்போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாடு அரசு 2022-23 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தற்போது ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  

 

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலை ஆய்வு செய்துவிட்டு, திருக்கோவில் திருமுக்குளம் சீரமைப்பு பணிகள், திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துதல், மற்றும் கோவில் நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர்,  கோவில் நிர்வாகிகள், மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

“தமிழ்நாடு அரசு,  இந்து சமய  அறநிலையத்துறையின் மூலம் திருக்கோயில்களை மேம்படுத்தவும், பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து தருவதற்கும்,   பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு, திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. சட்டப்பேரவை மானிய கோரிக்கையில்,  ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, திருக்கோவில்களின் தேவைகளையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்  ஆய்வு செய்து வருகின்றனர்.

 

What is the need of the devotees going to the temple? -The Minister of Charities conducting the study!

 

அதனடிப்படையில்,  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள சக்தீஸ்வரன் திருக்கோவிலில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டதோடு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வீர வசந்த ராயர் மண்டபத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள வசந்த மண்டபமும் ஆய்வு செய்யப்பட்டது.

 

தற்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஜீயருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அடுத்து,  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும்,  நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 12 அம்மன் திருக்கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி, குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் நடைபெறவுள்ள 108 திருவிளக்கு பூஜை தொடங்கி வைக்கப்படவுள்ளது.” என்றார்.  

 

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறார் தமிழ்மூதாட்டி ஔவையார். கோவில் என்பது பண்டைய காலத்தில் ஒரு பண்பாட்டு மையமாகவே திகழ்ந்திருக்கிறது. கலை, இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை எனக் கலையோடு தொடர்புடையதாகவும் கோவில்கள் உள்ளன. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் சொன்னதற்குப் பின்னால், விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற வாழ்வியலும் உண்டு.

 

தமிழக அரசு மேற்கொள்ளும் கோவில் புனரமைப்பு பணிகள் மூலம் பக்தர்கள் மனம் குளிர்வதோடு, நாட்டுக்கும் நல்லது நடக்கும் என்பது பெரும்பாலானோரின்  நம்பிக்கையாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.