Skip to main content

ஹெல்மெட் போட்டால் சாக்லெட் தருவாங்க! நாமக்கல் போலீசார் நூதன விழிப்புணர்வு!!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் தற்போது நூதன முறைகளில் வி-ழிப்புணர்வு பரப்புரை செய்யத் தொடங்கி விட்டனர். சாலை விபத்துகளினால் உயிரிழப்போரில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து, தமிழகம்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான சாலை விபத்துகளின்போது தலையில் அடிபடுவதாலேயே மரணம் சம்பவக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.


நடந்து செல்வோரைக் காட்டிலும், மோட்டார் சைக்கிளில் செல்வோரே அதிகளவில் விபத்துகளில் சிக்குகின்றனர். ஆக, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிர்சேதத்தைக் கட்டுப்படுத்த ஹெல்மெட் எனும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. என்னதான் உயர்நீதிமன்றமும், காவல்துறையும் தலையில் குட்டி குட்டிச் சொன்னாலும், சாலையை தரமாக போட்டார்களா? என அரசை குறை சொல்வதும், தீர்ப்பு அளித்த நீதிபதி காரில் செல்லும்போது முதலில் சீட் பெல்ட் போடட்டும்...அப்புறம் நாங்கள் ஹெல்மெட் அணிகிறோம் என்று சாக்குப் போக்குச் சொல்லி நீக்குப்போக்காக தப்பிக்கும் வாகன ஓட்டிகளும் உள்ளனர்.

wear helmet police has give chocolate namakkal district

அதையும் மீறி வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு வழக்குப்பதிவு செய்தால், சமூக வலைத்தளங்களில் அவர்களையே குற்றவாளியாக்கி பதிவிடும் போக்கும் அதிகரித்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறையினர், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து வேறு ஒரு நூதன வழிமுறையைப் பின்பற்றுகின்றனர்.


மாநகரில் இரண்டு முக்கிய சாலைகளில் செல்ல வேண்டுமெனில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் செல்ல முடியும். இல்லாவிட்டால், அந்த வாகன ஓட்டிகள் வந்த வழியிலேயே திருப்பி விடப்படுவர். இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.


இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவோருக்கு சுவையான சாக்லெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தும் நூதன வழிமுறையைப் பின்பற்றுகின்றனர். நாமக்கல்லிலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதில் காவல்துறையினர் தீவிரமாக இருந்தாலும், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் போடாமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்தும் பொதுவெளியில் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இந்நிலையில்தான், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், திங்கள்கிழமை (பிப். 3) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார். 


இதுதொடர்பாக அவர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தார். இதையடுத்து, திங்கள் கிழமை காலையில், ஆட்சியர் அலுவலக முதன்மை நுழைவு வாயில் அருகே மாவட்ட காவல்துறை எஸ்பி அருளரசு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 


அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர். அவர்களை ஹெல்மெட் அணிந்து வரும்படி வற்புறுத்தினர். அதையடுத்து ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு காவல்துறை எஸ்பி சுவையான சாக்லெட்டுகளை வழங்கினார். 


வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கையையும் விநியோகம் செய்தனர். இந்த சிறப்பு வாகனத் தணிக்கை 45 நிமிடங்கள் நடந்தது. சாக்லெட் வழங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையின் நூதன உத்திக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.