Skip to main content

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மாட்டோம்! உச்சநீதிமன்றத்தில் கேரள வாக்குறுதி!!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 
முல்லை பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணையை தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் கட்ட மாட்டோம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளது.
 
 
தேனிமாவட்டத்திலுள்ள தமிழக-கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் குமுளி தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது கர்னல் பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை. இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. இப்படி புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
dam
 
 
 அந்த மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014 தீர்ப்பு அளித்தது. இந்த அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கூடாது என அந்த தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது ஆனால் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு புதிய அணையை கட்டுவதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இது 2014 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி இருந்தது. அதனால் கேரளா மற்றும் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடு வேண்டும் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
 
 
 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர்களான ஏ.கே.சிக்ரி,அப்துல் நசீர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
அதுபோல் கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்ட வாதிட்டபோது, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கவில்லை புதிய அணை கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி பெறாமல் முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட மாட்டோம் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வாதத்தை பதிவு செய்த உச்சநீதிமன்ற அமர்வு தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக தீர்ப்பளித்துள்ளது.
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.