Skip to main content

“தடையை மீறி  இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம்..” - சந்துரு

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

"We will hold a Ganesha Chaturthi procession on behalf of the Hindu People's Party in defiance of the ban ..." - Chandru

 

இந்தியா முழுக்க வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதலுக்குத் தடைவிதித்துள்ளது. அதேவேளையில் வீட்டில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவும், வீடுகளில் வழிப்படும் சிலைகளைக் கோயில்களில் வைத்தால் அதனை அறநிலையத்துறை மூலம் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

 

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கட்டாயம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியினர் தற்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மலைக்கோட்டை முன்பு  சுமார் 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை மாணிக்க விநாயகர் சன்னதியில் வைத்து தேங்காய், பழம் வைத்து சூடம் ஏற்றி பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சியினர் மற்றும் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சந்துரு, “சுதந்திரப் போராட்டத்தில் இந்து மக்களுக்கு எழுச்சியை ஊட்ட ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த விநாயகர் ஊர்வலம். தற்போது இந்த விநாயகர் ஊர்வலத்திற்குத் தடை விதிக்கிறார்கள்.  தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தடையை மீறி  இந்து மக்கள் கட்சி சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது