Skip to main content

மலேசியாவில் வைகோவுக்கு தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்த அமைச்சர்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோவும் மலேசியா நாட்டின் பினாங்கும் மாநில துணை முதலமைச்சர் ராமசாமியும் நெருங்கிய நண்பர்கள். விடுதலைப்புலிகள், ஈழம் என்பதில் இருவருக்கும் ஒற்றுமை அதிகம். தமிழ்நாடு வந்தால் வைகோவை சந்திக்காமல் செல்லமாட்டார் ராமசாமி. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த ராமசாமியை மாமல்லபுரம் அழைத்துச் சென்று சிற்பங்களை காட்டினார். தமிழ், வரலாறு, தமிழர் பண்பாடு மீது அதிக பற்றுக் கொண்டவர் ராமசாமி.
 

 

 

கடந்த ஆண்டு மலேசியாவில் துணை முதல்வர் ராமசாமி மகள் திருமணத்திற்க்காக தமிழ்நாட்டில் இருந்து வைகோவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் வைகோ தனது உதவியாளருடன் சென்றார். ஆனால் விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்று கூறி ஒரு நாள் முழுக்க காத்திருக்க வைத்து சென்னைக்கே திருப்பி அனுப்பினார்கள். இதனால் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும், தமிழின உணர்வாளர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மலேசியாவுக்கு வர கூடாது என்றால் ஏன் விசா கொடுத்தார்கள் என்று கேள்விகளை கேட்டார்கள். நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் தண்ணீர் கூட குடிக்காமல் அமைதியாக இருந்தார் வைகோ.


 

Minister of Water for Peace in Vaiko in Malaysia!


 

இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ராமசாமியின் மகன் திருமணத்திற்காக சென்னையிலிருந்து தனது உதவியாளருடன் மலேசியா சென்றுள்ளார் வைகோ. அவரை தமிழர்கள் பலர் வரவேற்றனர். தொடர்ந்து மலேசிய விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கியோங் வைகோவை சமாதானம் செய்யும் விதமாக குடிதண்ணீர் கொடுத்து கடந்த முறை நடந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்தார். அதனால் வைகோவும் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். 

 

 


 

Minister of Water for Peace in Vaiko in Malaysia!




தொடர்ந்து மலேசிய நண்பர்களுடன் பத்துமலை முருகன் கோயிலுக்கு சென்றார். இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் உபசரித்து வைகோவை தமிழகம் அனுப்ப வேண்டும் என்று துணை முதல்வர் ராமசாமி குடும்பத்தினரும், நண்பர்களும் வைகோவுக்கு உபசரிப்புகளை செய்து வருகின்றனர். மேலும் திருமண விழாவில் கலந்து கொள்ளும் போதும், செய்தியாளர்கள் சந்திப்பு இருந்தாலும் விடுதலைப்புலிகள் பற்றி பேசிவிட வேண்டாம் என்று பலர் கூறி வருகின்றனராம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.